Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை  வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில்  வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே பண்பாய் நானும் தினமுமே பாட்டாய் எழுதித் தருவேனே பதிலும் தினமும் கொடுப்பனே உருகி உருகி எழுதியும் உணர்ச்சி மிகுந்தே சொல்லியும் உண்மைத் தன்மை மாறாது உள்ளதை நன்றே சொல்வேனே எதுகை மோனை எழுத்திலே என்றும் தொடர்ந்தே காப்பேனே எல்லா நேரமும் நல்லதாய் எதையும் எழுதி விடுவேனே காதல் காமம் எழுதுவேன் கண்ணீர் வந்திட சொல்லுவேன் ஊர்கள் சென்றதை சொல்லுவேன் உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன் மனதில் தோன்றும்  எல்லாமே மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே மக்கள் என்னை ஒதுக்கும்வரை மகிழ்வாய் கவிதை படைப்பேனே அழகாய் கவிதை படைப்பதால் அன்பாய் நாளும் இருப்பதால் அனைவரும் என்னை விரும்புவதால் அதனால் நானும் இறைவனே

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

ரசித்தவர்கள்