Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!

Image
நன்றி  !              நன்றி !!                     நன்றி !!! கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மாதங்கள்                                                  =15 பதிவுகளின் எண்ணிக்கை                =350 பார்த்தவர்களின் எண்ணிக்கை   =50000  இன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும்  மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன். -------கவியாழி------

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை நிம்மதியாய்த் தூங்க வில்லை தூரம் அதிகமாய் ஒருவீடும் தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால் காலைமாலை என அலைச்சலால் கண்ணெரிச்சல் குறைய வில்லை கண்டபடி தூங்க வேண்டியே கண்ணு ரெண்டும் அழைத்தே உடல் சூடும் குறையவில்லை உள்ளபடி எந்தக் குறையுமில்லை உண்மையாகச் சொன்னாலே எரிச்சல் உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை மகிழுந்தில் சென்றாலும் வெக்கை மறுபடியும் நிழலையே தேடுது மகிழ்ச்சியை மறந்தே மழையும் மக்களை  இப்படி  வதைக்குது வேலைச் செய்யவும் நேரம் வீணாய்க் கடந்து போகுது விடியல் காலை எழுந்தாலும் விழியில் கண்ணெரிச்சல் இருக்குது வெள்ளாமை இல்லாத நிலமும் விலைவாசியில் துள்ளிக் குதிக்குது எல்லா இடமும் சென்னையில் இப்படித்தான் வீடாய் இருக்குது இயற்கையின் சதியும் காரணமாய் இன்றையச் சூழல் இருக்குது என்னைப்போல் எத்தனைப்பேர் எரிச்சலால் மனம் தவிப்பது

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும் இளையோர் கூட அகப்படும் பொல்லா நோயாம் நீரழிவு புரிந்தே நடந்தால் போய்விடும் தினந் தோறும் மதுப்பழக்கமும் தீராத மனநோயுமே தொடர்ந்தால் வேராக வளர்திடுமாம் நீரழிவு வினையாக நோயாக வந்திடுமாம் மருந்தே இதற்க்குத் துணையாக மாலைகாலை  தின்று வந்தால் மறையும் காலம் அதிகரித்தே மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம் காலை மாலை வேளைகளில் கடினமான பயிற்சி செய்து வேளை தோறும் மருந்துகளை விட்டு விடாமல் சாப்பிட்டும் வியர்வை பார்த்தே விளையாடி வீதியில் காலாற நடமாடி விதியால் வந்த வியாதியை விரைவில் கட்டுக்குள் வைக்கலாம் மனதில் கவலை வைக்காமல் மருந்தை துணைக்கு அழைக்காமல் தினமும் பயிற்சி செய்தாலே திரும்ப வராமல் தடுத்திடலாம் உடற்பயிற்சியும் மனவலிமையும் உடலுறுப்பை உறுதி செய்யும் மனவளக் கலையையும் யோகாவும் மருந்தைவிட சிறந்த பலனாகும் ********கவியாழி*********

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.         இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.         ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்            சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப

ரசித்தவர்கள்