தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ்சிறு செல்லங்கள்



சின்ன  மலர்களே
சிரிக்கும் பூக்களே

வண்ண நிறத்து
வாண்டு குட்டிகளே

உண்ண மறுக்கும்
உவ்வா செல்லமே

மண்ணையும் திங்கும்
மழலை செல்வங்களே

கண்ணீர் வராமல்
கண்ணடிக்கும் கண்ணே

உன்னை  காணாது
உணவருந்த  முடியாது

கண்ணே கனியே
இனிக்கும் கற்கண்டே

உன்னை விரும்பாதோர்
உலகில் உண்டோ

சின்னஞ் குழியுடன்
சிரிப்பாய் சிவப்பாய்

எண்ணமெல்லாம் நீ
வண்ணமாய்  இருக்கிறாய்

சொன்னதையே நீ
எந்நாளும் இருக்கிறாய்

இந்நாளில் உன்னை
இனிதாக வாழ்த்துகிறேன்





Comments

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more