Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மார்கழிப் பூவோ

நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே   வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை   நடந்துந்துவர முகம்   தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி பயந்து   வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் ஓசை மலைச்சாரல்   தூறல்போல பனித்துளியும்   முகமலர்ந்த நீ மார்கழிப் பூவோ.....

வேள்விக்கு வருவாயா?

சந்தனத்தில் சிலைவடித்து சவ்வாது நீறு பூசி வாசமலர்போல் வானெங்கும் வாசமெங்கும் வீசுகின்ற ஈசன் மகளா ? மான் கூட்டமெல்லாம் மயங்கி மண்டியிட்டு நிற்கும் மயில் கூட்டமோ ? மகிழ்ந்து ஆடி தோகை விரிக்கும் மங்கையுனைப் பார்த்ததாலா ? சிற்றுடல் மங்கையே சிவந்த நிற மங்கையே பற்றுதலாய் கேட்கிறேன் பாசத்துடன் வருவாயா பக்கம் வந்து அணைப்பாயா ? ஏன்  மறுக்கிறாய் ஏதோ மழுப்புகிறாய் இன்னும் ஏன் வெட்கம் என்றும் நமக்கே சொர்க்கம் வேள்விக்கு வருவாயா?

மதமா? மானுடமா?

மானுடத்தை மதம் மதிக்கிறதா மறுக்கிறதா புதுமையான தமிழ் சாதி போற்றுமே சம நீதி ஏழைப் பணக்காரன் என்பது தானே விதி கோழைகள் காண்பது கொள்ளை அடிப்பது ஏழையை ஏய்த்து சுரண்டி பிழைப்பது ஏவிவிட்டு எதிரியாய் என்றும்  பகை வளர்ப்பது தேடிப்பாருங்கள் மனதில் தெளிவு பிறக்கும் வேடிக்கை பார்க்காமல் வேதனையை வளர்க்காமல் வாழ விடுங்கள் வாழ்கையை  மகிழ்ச்சியாக

திசையெங்கும் முழங்கி வா தமிழே

துன்பத்தை தொலைத்தது  போல் துள்ளி விளையாடி வரும் கள்ளவிழி  நங்கை கவிங்கர்களுக்கோ தங்கை அவளோ தமிழ் கங்கை உலகமெல்லாம் ஓடி உன்புகழ் பாடி கலகமும் கஷ்டமும் மறந்தே நிலைக்கொள்ளா ஆனந்தம் நின் மடியில் கிடைக்குதடி இலைபோட்டு விருந்தை எந்நாளும் தருமுனக்கு சிலை வடித்து இருக்கிறேன் சிரித்தோடி வந்திடு என்னோடு தங்கிடு படை கூட்டி பாவை உன்னை அழிக்க படுபாவி நினைத்தாலும் விடைகொடுக்கும் நேரமிது விரைந்து வா விடியலைத்தா அலை கடந்து தவிக்கும் கொடியுறவு தமிழனுக்கு திரைகடல் தேடி தேசமதைத் தருவேன்   என திசையெங்கும் முழங்கி வா www.kaviyazhi.com

தமிழனுக்கு தொடரும் துக்கமடா

சுட்டுவிட துடிக்கின்ற சூரியனுக்கும் வெட்கமில்லை எட்டும் திசையும் சென்றாலும் எங்கெங்கு  காணினும்  வெட்கமடா-இன்னும் தமிழனுக்கு தொடரும்  துக்கமடா உன்னை காணாத உயிரில்லை உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை கள்ளத்தனமாய்  செய்கிறான் கண்டபடி கொல்கிறான்- பக்சேவை உனக்கு தெரியாதா இத்தனை நாளாகியும் இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி உன்னத் துடிக்கும்-தமிழர்கள் உன்னையும்  வணகுவதாலோ நீயும் அவனும் சேர்ந்து நிம்மதி கெடுக்க நினைக்கும்  செயல் சரியா நேர்மை தவறல் முறையா-இன்னும் அவனை ஏன் காக்கிறாய் www.kaviyazhi.com

ரசித்தவர்கள்