Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழலையின் சிரிப்பு மத்தாப்பு

மத்தாப்பு பூத்ததுபோல் மழலையின் சிரிப்புதனை தப்பாக பேசமுடியுமா தவறாக சொல்லலாகுமா கத்தாளை உடம்புபோல காட்சியாக இருந்தாலும் கருப்பாக வழுக்கையாய் தூங்குமூஞ்சி ஆனாலும் சிட்டாக தாவிவரும் சிறுநீரை கழித்தாலும் மொட்டான மலர்களை திட்டத்தான் இயலுமா பூவைத்து பொட்டிட்டு புதுசட்டையும் போடாமல் புன்சிரிப்பாய் ஓடிவரும் பிள்ளைகளை பார்த்ததும் தொல்லைகளை மறந்து தோளில் சுமத்தியதும் மனதில் மகிழ்ச்சியை-யாரும் மறைக்கத்தான் முடியுமா

காரணம் நிச்சயம் பணமாமே

பாட்டிச் சமையலை புசித்தீரா பாட்டன் கதையை கேட்டீரா பணமும் அதிகம் செலவில்லை-உறவு பண்பே குறைந்தும் போவதில்லை அங்கும் இங்கும் அலைவதனால் அறமே மறந்து வாழ்வதினால் பண்பும் கெட்டு வாழ்கிறார்-இதையே படித்தவர் தானே செய்கின்றார் கற்பனையான வாழ்க்கைதனை காணத்தானே  தவறு செய்யும் சிற்சில மக்களின் தவறுகளால்-மகிழ்ச்சி சிதறிடும் வாழ்க்கை நியாயமா தேடி எங்கும் செல்லாமல் தெய்வம் வந்து சொல்லாமல் கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை கோடிப் புண்ணியம் கூடுமே பெற்றோர் துணையும் இல்லாமல் பிறிதொரு வாழ்க்கைத் தனியாக கற்பனை கொண்டவாழ்க்கைக்கு-உண்மைக் காரணம் நிச்சயம் பணமாமே

மீண்டும் சென்னைக்கே வந்துட்டேன்

அன்பான வலைத்தள நண்பர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் மூன்று வருடத்திற்கு மேலாக- பணிக்கு முடியாமல் தினமும் பயணமானேன் நீண்ட காலம் சென்றபின்னும் நேரம் கடந்து அங்கிருந்தேன் பகையான நட்புக்களால் தினமும் பரிதவித்துக் கண் கலங்கினேன் தாண்ட முடியா சிரமங்களும்-மனதில் தன்னிடமே கொண்டு வாழ்ந்தேன் தகையோரின் பெரியோரின் ஆசியாலே துயரமெல்லாம் தாங்கி நின்றேன் தயவாக வேண்டியே விண்ணப்பித்து தடம்மாறி மீண்டும் வந்திட்டேன் உயர்வான எண்ணத்துடன் -இங்கே ஊழியத்தை நன்றே செய்திடவே பகைமாறி பாசமும் நேசமும் பண்பாடும் நாகரீகம் போற்றியே நெடுநாளாய் நானும் காத்திருந்து -மகிழ்ச்சியாய் மீண்டும் சென்னைக்கே வந்திட்டேன்

மனிதம் போற்றி வாழ்ந்திடவீர்....

போரின்றி ஈழம் கிடைக்காதோ

ஒற்றுமையாய் தமிழர்கள் இருப்பாரோ ஓரணியில் சேர்ந்து உழைப்பாரோ போரின்றி ஈழம் கிடைக்காதோ-ஐநா புகுந்து வாக்கெடுப்பு நிகழ்த்தாதோ பார்போற்ற மகிழ்ச்சித் திரும்பாதோ பைந்தமிழன் வாழ்வும் சிறக்காதோ பூவுலகில் தமிழன் புகழ் இருக்க-புதிய விஞ்ஞான நிகழ்வும் நடக்காதோ விஜய வருடத்தில் விடிவும் விடுதலைக்கான தூய தெளிவும் வீதியெல்லாம் கோலம் போட்டு-தமிழன் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்காதோ அயல்நாட்டில் வாழும் அனைவரும் அப்பா அம்மா கூட்டுக்குடும்பமாய் எப்போ ஒன்றாய் மகிழ்ந்து-இன்பம் தப்பா வாழ்வு மீண்டும் கிடைக்குமா சிண்டு சிறுசும் ஓடியாடி விளையாடி கெண்டு கிழங்கள் பேசி மகிழ்ந்து திண்டு திண்ணை சுற்றம் கூடி-இன்பம் கண்டு மகிழும் நாளும் வாராதோ

ரசித்தவர்கள்