மழலையின் சிரிப்பு மத்தாப்பு
மத்தாப்பு பூத்ததுபோல் மழலையின் சிரிப்புதனை தப்பாக பேசமுடியுமா தவறாக சொல்லலாகுமா கத்தாளை உடம்புபோல காட்சியாக இருந்தாலும் கருப்பாக வழுக்கையாய் தூங்குமூஞ்சி ஆனாலும் சிட்டாக தாவிவரும் சிறுநீரை கழித்தாலும் மொட்டான மலர்களை திட்டத்தான் இயலுமா பூவைத்து பொட்டிட்டு புதுசட்டையும் போடாமல் புன்சிரிப்பாய் ஓடிவரும் பிள்ளைகளை பார்த்ததும் தொல்லைகளை மறந்து தோளில் சுமத்தியதும் மனதில் மகிழ்ச்சியை-யாரும் மறைக்கத்தான் முடியுமா