Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பணம்....பணம்...பணம்..

மக்கள் பலபேர் மடிவதற்கும் மனதை வருத்திக் கொல்வதற்கும் நிச்சயக் காரணம் பணமாமே நித்தமும் கெடுப்பது இதுதானே மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு மனமே வருத்தி மாய்வதற்கு மனிதம் தெரியாப் பணமாமே மனிதனின் குணமும் கெடுதாமே நாளும் நாளிதழ் பார்க்கின்றோம் நல்லச் செய்திகள் இருந்தாலும் வாழும் முறையில் மாற்றத்தால் வருத்தித் தினமும் அழுகின்றோம் தினமும் நாமே காண்கிறோம் தெரிந்தும் மௌனம் காக்கிறோம் குணமே இல்லாப் பணத்தாலே குடும்பமே தற்கொலை செய்கிறதே அவசர உலகில் அனைவருமே அடிமை வாழ்வு வாழ்வதற்கும் அக்கம் பக்கம் நடப்பதற்கும் அடைக்கலம் கொடுப்பது பணமாமே

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல.........

வாகனம் ஓட்டிச் செல்லும்போது வருகிறக் கோபத்தில் மறுந்துடாதீர் வண்டியை வேகமாய் ஒட்டாதீர் வழியில்  தவறாய் செலுத்திடாதீர் தலையில் கவசம் அணிவதனால் அழகும் கெட்டுப் போகாதே தடுமாறிக் கீழே விழுந்தாலும் தலையும் எங்கும் மோதாதே கண்டவர் அருகே வந்தாலும் கண்களை வேறங்கும் திருப்பாதீர் கைபேசி அழைப்பையும் தவிர்த்திடுவீர் கவனமாய் வாகனம் செலுத்திடுவீர் நீண்ட தூரம் செல்லுகையில் நிதானம் எப்போதும் இழக்காதீர் இருக்கைப் பட்டையை அணிந்தே இயல்பாய் வாகனம் செலுத்திடுவீர் வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல வாழ்க்கை உண்டு மறந்துடாதீர் தாகம் தண்ணீர் இடையிடையே தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்

பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி

Image

இந்நாள் தவிப்பு....

இதயமெல்லா மின்றுத் தவிக்கிறதே ஈன்றவர் நினைவு வருகிறதே தாண்டிய தூரமும் தெரிகிறதே தாங்கியோரை நினைத்தேத் தவிக்கிறதே என்னைத் தவிக்க விட்டு எங்கே சென்றீர்கள் கடவுளே விண்ணைத் தாண்டி வரவா வேதனையைச் சொல்லி அழவா வேண்டுவேன் உங்களை  மீண்டுமே வேதனைத் தாங்கியேக் காத்திட மீண்டுமென் உங்களின் அன்பையே மீட்டிடப்  பிறந்திட விரும்புதே ஈன்ற இந்நாள் தெரியுமா என்னை அறிந்திட முடியுமா வேண்டுவேன் உங்களது ஆசியை வேதனைத் தீர்த்திட வாருங்கள் விதியை மாற்றியே வாருங்கள் வெளிச்சமும் எனக்குத் தாருங்கள் தாண்டிய நாட்களை நானுமே திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன் அடுத்தப் பிறவி யாதென அறிந்து நீவீர் சொல்வீரோ தடுத்தே என்னை உம்முடன் துணைக்கு அழைத்துச் செல்வீரோ

உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......

உலகம் முழுவதும் அங்கங்கே உரிமைப் பிரச்சனை வருகிறதே உயிர்கள் பலவும் மடிகிறதே உயர்வும் அதனால்  தடுக்கிறதே கலகம் கலவரம் திருட்டுகளும் கயவர் கூட்டக் கொள்ளைகளும் கடிந்தே தினமும் நடக்கிறதே கவலை மனதில் தருகிறதே விலையும் தினமும் ஏறுவதால் விஞ்சிக் கவலைத் தருகிறதே பொன்னும் பொருளும் இல்லாமல் புலம்பும் நிலையே வருகிறதே திண்ணைப் பேச்சு இப்பொழுதே தினமும் வீணாய் போகிறதே பண்ணை எங்கும் காணாமல் பரந்த வெளியாய் இருக்கிறதே கவலை இல்லா வாழ்க்கைதனை கடக்கும் நிலையும் திரும்புமோ நிலைமை எப்போ மாறுமோ நிம்மதி மீண்டும் திரும்புமோ சண்டை என்றும் இல்லாமல் சமத்துவம் எங்கும் விரும்பினால் அனைத்துமே நிலைமை மாறிடும் அகிலமே அன்பால் செழித்திடும்

ரசித்தவர்கள்