பணம்....பணம்...பணம்..
மக்கள் பலபேர் மடிவதற்கும் மனதை வருத்திக் கொல்வதற்கும் நிச்சயக் காரணம் பணமாமே நித்தமும் கெடுப்பது இதுதானே மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு மனமே வருத்தி மாய்வதற்கு மனிதம் தெரியாப் பணமாமே மனிதனின் குணமும் கெடுதாமே நாளும் நாளிதழ் பார்க்கின்றோம் நல்லச் செய்திகள் இருந்தாலும் வாழும் முறையில் மாற்றத்தால் வருத்தித் தினமும் அழுகின்றோம் தினமும் நாமே காண்கிறோம் தெரிந்தும் மௌனம் காக்கிறோம் குணமே இல்லாப் பணத்தாலே குடும்பமே தற்கொலை செய்கிறதே அவசர உலகில் அனைவருமே அடிமை வாழ்வு வாழ்வதற்கும் அக்கம் பக்கம் நடப்பதற்கும் அடைக்கலம் கொடுப்பது பணமாமே