Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே இளையவர் நன்கே வளர இன்முகம் காட்டி சிரித்தவள் இளமை மறந்து வாழ்ந்தவள் விடைலை வயதில் நின்றவள் வீதியில் வீம்பாய் நடந்தவள் வேடிக்கைப் பார்த்துச் சென்றவள் வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் குடும்பம் தொடங்கி வைப்பவள் குழந்தை சிலதைப் பெற்றவள் குறும்புத் தனத்தை மறந்தவள் குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் சோதனைக் காலம் கண்டவள் துணையுடன்  மகிழ்ந்து வாழபவள் துயரம் மிகுந்தும் நகைப்பவள் தூய்மை  அன்பைக் கொடுப்பவள் ஆக்கம் கொடுத்த தாய் அவள்தான் எனது சகோதரி அன்பாய் இருக்கும் மனைவி அடுத்தது எனது மகளே ******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது நேரமும் காலமும் கழிந்தது நிம்மதி சிலநாள் கிடைத்தது நேர்மையாய் உணர முடிந்தது பார்ப்பவர் எண்ணம் புரிந்தது பாதையும் தெளிவாய் தெரிந்தது பகலும் இரவும் போலவே பசுமை வெறுமை கடந்தது இன்றைய நாளில்  நடப்பது இன்பம் விரும்பி வாழ்வது இளமை  வெறுமை இழந்தது இனிமை வாழ்க்கை ஏங்குது துன்பம் மெல்ல விலகுது துயரம் தாண்டி செல்லுது தூயநல்  நட்பும் தொடருது துணையாய்  அருகில் வாழுது நாளைய ஏக்கம் தொடருது நல்லதும் கெட்டதும் தெரியுது நாணயம் என்னுள் இருப்பதால் நன்மையும் தீமையும் தெளிந்தது வேதனை சிலதும் மறைந்தது வெளிச்சமும்  அதனால் வந்தது வேண்டி  விரும்பி  மனதுமே வெற்றி பெறவே  துடிக்குது -----கவியாழி------

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே அகிலம் போற்றும் குணவதியே எல்லா குழந்தையும் கற்றிடவே என்றும் கொடுப்பீர் அருள்மழையே இல்லா பிள்ளையும் கற்றிடவே இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும் பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும் பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும் சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும் சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும் நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும் செல்வம் சேர்க்கா பணியாக செலவில்லாமல் தினம் கற்பிக்கும் சொல்லில் சிறந்த சீமான்கள் செய்யும் பணியும்  சிறந்திடவே அன்பும் அறிவும் பெருகிடவே அனைவரும் போற்றும் கல்விக்கு அம்மாதாயே அருள் கொடுத்தால் ஆயுள் முழுக்க வணங்கிடுவேன் ----கவியாழி----

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

ரசித்தவர்கள்