Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையே நீயும் மீண்டும் வா!வா!!

மழையே நீயும் வா வா மகிழ்ச்சி எமக்குத் தா தா மரங்கள் வளர  செடிகள் வளர மீண்டும் மீண்டும் தொடர்ந்து வா பிழையே செய்யா உயிரினமும் பிழைக்க வைக்கத் தொடர்ந்து  வா பிழையாய் வெட்டிய  மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா புயலாய் சூழ்ந்தும் ஓடிவா புதிதாய் உணர்வைக்  கொடுக்க வா பூச்சியும் பறவையும் பறக்கவும் புல்லும் பூண்டும் முளைக்கவும்  வா நாட்டு மக்கள் மனங்குளிர வா நல்ல காற்றுமே கிடைக்க நாகரீகம் என்ற பெயரில் நாசமாக்கும் குளிர்விப்பான் தவிர்க்க வா கடனே கேட்கா  காற்றை கண்குளிர கொடுக்க  வா காய்ந்த நிலத்தைப் பசுமையாக்க கழனிப் பயிர்கள் செழிக்க வா நாட்டு உழவன் மகிழ வா நாளும் உணவு கிடைக்க வா நீயும் உடனே விரைந்து வா நித்தமும் மக்கள்  மகிழ வா (கவியாழி)

இறைவனைக் காணவில்லையா?

இறைவனை இன்ப மாக்க இன்னிசைச் சத்தம் ஒலிக்கப் பறையடி மேளம் முழங்கப் பாட்டுப்பாடி ஆட்டமாடி வேட்டுச் சத்தம் கேட்டுமே வெளிச்சமாய் ஒளி வீச உடுக்கை அடித்துப் பாடி ஊரே ஒன்றாய் கூடி எல்லோரும் ஒன்று சேர்ந்து இறைவனுக்கு பொங்கல் வைத்து நல் விருந்துப் படைத்து நலமாக வாழ வேண்டி உள்ளவரும் இல்லாத ஏழையும் ஒன்றாக தேர் இழுத்து பல்லா ண்டாய் மகிழ்ந்தும் பரவசமாய் வேண்டி வந்தும் எல்லோரும் அன்பாய் அழைத்தும் யாருமே பார்க்க முடியாத பொல்லாத சக்தி அவன் பொய்யாக வாழ்கின் றானோ (கவியாழி)

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு....

துணையாய் தொடர்ந்து வந்து தோழனாய் நட்பு கொண்டு மனதில் குடிகொள்ளும் மனைவியாய்இருக்க வேண்டும் பெற்றவரை பிள்ளைகளைப் போல் பேதமும் பார்க்காது விருப்பமாய் உற்றாரும் வாழ்த்திச் செல்லும் உற்றவளின் குணமே வேண்டும் பிறி தொன்றும் கேட்காத பிறரைப் பற்றிக் கூறாத அன்புடனேஆசை கொள்ளும் அன்னையாய் இருக்க வேண்டும் ஆசை அன்புக் கென்று அகம் மகிழ பிள்ளையுமே அளவான செல்வமும் சேர்த்து அன்பான குடும்பம் வேண்டும் பணி முடிந்து வரும்போது பணம் மட்டும் கேட்காத குணமுள்ள மனைவி வேண்டும் குடும்பம் மகிழத் துணைவேண்டும் (கவியாழி)

தேனெடுக்கும் அவசரத்தால்.....

நீரி ருக்கும் நிலத்தினிலே நிச்சயமாய் வாழ்ந்து வரும் நிம்மதியாய் வளர்ந்து வந்து நிறம் மாறி பூவாகும் பூப்பூக்கும் முன்னே தேனீ புகுந்து உள்ளே தேனெடுக்க தேன் குடிக்கும்அவசரத்தால் தெரியாமல் பூத்து விடும் குருவிகளும் கொத்தித் தின்ன கொள்கையுடன் படை யெடுக்க கொஞ்ச நேர இடைவெளியில் வண்டுகளே தேன் குடிக்கும் வண்ட துவும்  கொண்டாடி வேலையினை செய்த பின்பு கண்டதுமே பறிக்கத் தூண்டும் கண்ணி மைகள் ஊஞ்சலாடும் வண்ணங்களோ பலநிறத்தில் வயது வந்த பெண்களையும் எண்ணமதை கவ்விச் சென்று எடுத்துடனே சூடச் சொல்லும் பெண்மணியின் பூ வாசம் பொறுமை யின்றி ஆண்களையே போரின்றி உடன்படிக்கை பெண் மனதில் குடியேறும் கண்ணி ரண்டும் ஒப்பந்தம் கண்ணடித்து செய்து கொண்டு எண்ணியதை இணை யிரண்டும் இனிமையாக உறவு கொள்ளும் (கவியாழி) காதலர் தின வாழ்த்துக்கள்...

பொறுப்புள்ள தந்தையாய்....

பொறுப்புள்ள தந்தையாய் இருந்து பிள்ளையைப் படிக்க வைத்து மறுத்திடா செலவு செய்து மக்களைக் காத்திடு உண்மையாய் உணர்த்திடு உள்ள கடமை உன்னுடைய வேலை யென்று உள் வாங்கிப் புரிந்திடவே உதவியாகச் சொல்லிக் கொடு தடம் புரண்டு செல்லாமல் தன் மானம் இழக்காமல் இடம் பொருள் ஏவலையும் இன்முகமாய் சொல்லி வளர்த்திடு நன்னடத்தை நா நயம் நல்லோரின் நல் ஆசியும் எல்லாமும் தெரிந்திடவே எப்போதும்உணர்த்தி விடு மென்மையாக சொல்லிக் கொடு மகிழ்ச்சியாக உணர்த்தி விடு பெண்மையின் உயர் தத்துவத்தை போற்றிப் போற்றி வாழவிடு

ரசித்தவர்கள்