கல்லறை வரையில் துணையே.......
இதயம் அடிக்கடித் துடிக்கும் இமையும் இணைந்தே அடிக்கும் கருவைச் சுகமாய்ச் சுமக்கும் கருவறை சிறையாய் இருக்கும் பிறந்ததன் கதைகளைச் சொல்லி பெரியவர் வரையில் தொடர்ந்து உழைக்கும் மனித வாழ்க்கை உறவுகள் இணைந்தால் சிறக்கும் இளமைக் கனவுகள் பலிக்கும் இணைந்ததும் சுகமாய் இருக்கும் பிறவிப் பலனை அடைந்தே பெரியவராக்கி உண்மையைச் சொல்லும் உறவுகள் தொடந்தே வாழும் உரிமைகள் மகிழ்ந்தே தொடரும் பிரிவைத் வெறுத்தே ஒதுக்கும் பிள்ளைகள் இணைந்தால் மகிழும் கடனே இல்லா வாழ்க்கை கடந்தும் இருந்தால் நன்று கல்லறை வரையில் துணையே கிடைத்தால் வாழ்கை மகிழ்ச்சி (கவியாழி)