எனது 25 வது திருமண நாள் 10.03.2015
கடந்த வருடங்களில் கண்ட மகிழ்ச்சி களிப்பூட்டிய நாட்கள் கணக்கி லடங்கா கடனாகக் கிடைத்த கனிவான சொந்தங்கள் கண்டதும் இன்பங் கொண்ட நட்புகள் தொடந்த துன்பங்கள் தொலைத்த இன்பங்கள் துரத்தி வந்தாலும் தாங்கினேன் நேசித்தேன் அடர்ந்த மனதிலே அன்றாடம் பூசித்தேன் அம்மா அப்பாவை அளவின்றி யாசித்தேன் வெறுப்பேற்றி சென்ற வீதிவழி உறவுகள் வீணாய் சண்டையிட்ட வீண்பேச்சுக் காரர்கள் பொறுப்பின்றி உறவாடி போய்விட்ட நண்பர்கள் போதையைத் தூண்டிய பேதைகள் இருந்தும் பணம்காசு சேர்க்காமல் பல்லிளித்துச் செல்லாமல் பதவியிலே தன்மானம் பறந்தெங்கும் போகாமல் குணம்மாறி சிறிதேனும் குற்றங்கள் செய்யாமல் குடும்ப உறவாக குறைவின்றி காத்திட்டேன் உறவுகள் என்னிடம் உதவி கேட்டால் உடனே செய்வேன் உறவையும் காத்தேன் பிரிவுகள் ஏற்பட பிணையின்றி செய்ததே பின்னாளில் தெரிந்தேன் பிரிவையும் தாங்கினேன் நட்புக்கு நான்தந்த நாட்களோ குறைவில்லை நாள்தோறும் மறக்காமல் நன்றியுடன் தானிருந்தேன் உட்பக்க இதயத்தில் ஓரிடத்தில் வைத்தும் உளமார தொடந்தும் ஒதுங்கிச் சென்றார் இக்கால வாழ்கையில் இடையூறு வந்தாலும் இனிமேலே த