பார்த்ததும் திண்பதை நிறுத்து!
உறவுகள் எனக்கு உதவி செய்யாது உணர்தவர் கண்டும் உண்மை சொல்லாது பிரிவினால் மனதில் பித்தம் பிடித்தேன் பிரிந்தவர் சொல்லும் காரணம் கேட்டே! வயிற்றில் கண்டதை விழுங்கி யதனால் வந்ததை உண்பதும் வாழ்வைக் கெடுக்க பயிற்சி தேவையா பலனேதும் உண்டா? பார்த்ததும் திண்பதை நிறுத்து! கொஞ்சிப் பேசும் கொழுந்தி யவளைச் கிஞ்சித்தும் இடம் கிடைக்க வழியின்றி வஞ்சித்துப் போகும் வாழ்க்கைத் துணையை வார்த்தை யுண்டோ வைய? அந்த நாளில் கண்டதைத் தேடி அலைந்த நட்பு அடங்காமல் இன்றும் நொந்தக் கதையை நான் கேட்டே நொடிந்தே கடிந்தேன் இன்றே கண்ணும் இமையும் கலந்து பேசி கண்ணன் வரவைக் கண்ட பின்னே விண்ணைப் பார்த்து வீதியைக் காட்டி விடுகதை போட்டது எதற்கோ? (கவியாழி)