மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்சியின் உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்
இயற்கையை மனிதன் அழித்தனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ
மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ
பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழ பணித்தாயோ
கவியாழி.கண்ணதாசன்
07.04.2020- சென்னை
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்சியின் உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்
இயற்கையை மனிதன் அழித்தனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ
மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ
பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழ பணித்தாயோ
கவியாழி.கண்ணதாசன்
07.04.2020- சென்னை
இன்னும் உணர வேண்டியது அதிகமுள்ளது...
ReplyDeleteயதார்த்த நிலையைச் சொல்லும் அருமையான கவிதை...தொடர வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல கவிதை. உணர்ந்து கொண்டால் நல்லதே.
ReplyDelete