அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !
பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை
பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை
மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க
மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ?
உச்சமடைந்து உயிரைபோக்க கீழே
உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ
அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு
அதுவும் கருகி உரமாய்ப்போகும்
மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு
மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம்
துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில்
தொங்கிக் கொண்டே விழுந்தே காயும்
இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து
இலைகள் போல மனிதன் வாழ்வும்
சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு
சோகமின்றி நல் நினைவாய் முடியும்
.........கவியாழி.கண்ணதாசன்......
சென்னை.27.08.2020
உண்மை....
ReplyDeleteமனித வாழ்க்கையும் இதுபோலத்தானே நண்பரே
Deleteகவிதை நன்று. பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க நண்பரே
Deleteஉண்மை
ReplyDeleteஉண்மை
அருமை
வருகைக்கு நன்றிகள்
Delete