Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பாக்கெட் மணி கொடு

கல்லூரிக்கு போகணும் காசு கொடு கைசெலவுக்கு வேணும்  காசு கொடு பேப்பர் வாங்க பேனா வாங்க-நண்பனோடு ஆட்டோ பேருந்தில் செல்ல காசுகொடு புதுப்படம் பார்க்கனும் பிறந்த நாளுக்கு படிக்கும் நண்பனுக்கு பார்ட்டி கொடுக்கணும் பெட்ரோல் போடணும் பழுது பார்க்கனும்-காசுகொடு  பஞ்சர் ஓட்டனும் பார்கிங் செய்ய பரீட்சை கட்டணம் பதிவு கட்டணம் கேண்டீன் போகணும் பிச்சா திங்கணும் படத்துக்கு போகணும் பந்தா காட்டனும்-சேமிப்பு கணக்கில் போடணும் காசு கொடு ஆணும பெண்ணும் அழகை ரசிக்க நானும் போடணும் நல்லதாய் தெரியணும் சென்ட் வாங்கணும் சிறப்பாய் இருக்கணும்-செலவுக்கு நாளும் காசுகொடு அப்பா காசுகொடு

அவசரப் பயணம் அவசியமா?

அவசரம் எல்லோர் மனதிலும் அவசரம் ஆட்சியாளருக்கும் அரசியல்வாதிக்கும் பேச்சு சுதந்திரம் பேணவேண்டி அவசரம்-மேடை பேச்சு எல்லாம் தனி ரகம் அவசரம் இருப்பவன் பணத்தை மறைத்துவைக்க இடம்தேடி பதுக்கும் வேலையில் அவசரம் ஏழைக்கு ஏழ்மை நீங்க அவசரம்-அன்றும் வேலை செய்த கூலிவாங்க அவசரம் எல்லாம் இருதும் வசதி இருந்தும் எதிரியை  நினைத்து நிம்மதி இழந்து பொல்லா  பகையால்  பொறுமைன்றி-உயிர் கொல்லும் நிலை கொடுமைக்கும் அவசரம் வாகனம் ஓட்டும் நேரம்கூட அவசரம் வாழ்க்கை மறந்து மதியும் இழந்து வேகமாக  ஒட்டி செல்லும் அவசரம் -சாலை விபத்தில் உயிர்ப்போவதிலும் அவசரம்

மறுபிறவி அறிந்தோர் யாரோ?

மறுபிறவி அறிந்தோர் உளரோ மறுபடியும் மனிதனாய் பிறப்பீரோ சிறுதவரிறின்றி சிந்தனை செய்வீரோ-சிந்தையில் சீரான மனிதனாய் வாழ்வீரோ மகிழ்வீரோ நேர்மையான அன்பும் நாளும் கொண்டு நிகரில்லா நல் பண்புடன் நடந்து ஊர் போற்றும் உன்னத மனிதனாய் -உலகில் உள்ளம் மகிழும் நால்லோர் ஆவிரோ மனிதநேயம் மக்கள் நல்வாழ்வு மானுடம்செழிக்க மகத்தான சேவை இயற்கை நெறியில் இன்முகத்தோடு-மனதில் இன்பம்  பெருகி எளிமையாய் இருப்பீரோ இயற்கை வளம் சிறக்க வைப்பீரோ இல்லாத மரங்களை புதிதாய் படைபீரோ செயற்கையாய் மனிதனை படைபீரோ-இதயம் சொல்வதை கேட்டு நேர்மையாய் நடப்பீரோ வானமும் பூமியும் வாழும் உயிர்களும் நிலவும் சூரியனும் சுற்றும் கோள்களுக்கும் சுதந்திரமாய்  நடப்பீரோ சொந்தமென -போரில் சுட்டு கொன்று சுயமிழந்து சாவீரோ இப்பொழுதே மாறி இன்றைய வாழ்வை இன்முகமாய் ஏற்று கற்பனையில் வாழாமல் கிடைத்ததை கொண்டு தப்பேதும் செய்யாமல்-வாழ்வில் தடம்மாறி செல்லாமல் இப்பிறவியில்  வாழுங்கள்

கொசுவே நீ செய்வது சரியா

அறிவுள்ள ஆறு நாள் எதிரியே அன்பாக   நீ முத்தமிட்டாலும் அலறுகின்றனர் எல்லோரும் அடிவாங்கி அமரனாகும் -உன்னை அடிக்காமல் விடுவோர் உண்டோ செடி கொடியில் வளர்ந்தாலும் சாக்கடையில் பிறந்தாலும் படைநடுங்கி ஓடுகிறது - பயந்து தொடை நடுங்குது எல்லோருக்கும் எதிரியை  வீழ்த்த  எனக்கு உதவ எழுநாள்  தாண்டியும் வாழ்வாயா ஏவியதும்  உடனே நீ  செய்வாயா-எமனாக காத்திருந்து அவனை கொல்வாயா அதிசய பிறவி நீ அன்பில்லா பகைவன் நீ கத்தியின்றி யுத்தம் செய்யும்-நீ கலிகால புதிரும் நீ உன்னை கொல்ல உலகமே முயலுது உயர்ந்த மருந்து புதிதாய் கிடைக்குது என்ன செய்தும் பயனில்லை  -உன்னால் எனக்கும் கூட வருத்தம் உன்மேலே முப்படையும் தோற்கும் உன் முன்னே முடிவுரை எழுதும் துயரமாய் நின்னே சத்திழந்தோரை \தானே நீ-சாகடிக்கிறாய் சரியா   நீ செய்வது  சரியா

விக்கல்

விக்கல் வருவது எதனால்? விரும்பியவர் நினப்பதாலா? தூக்கம் வருவதாலா? தொண்டையில் பிரச்சனையாலா? இதயம் பேசுதலா ? இல்லை எதனால் ? விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்

ரசித்தவர்கள்