Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ்சிறு விதைகள்-3

தோல்வியில் துவளாதே தொடந்து.... வெற்றியில்  வேள்விசெய் இதயம் சொன்னாலும் நீ.. இன்பத்தை  மறக்காதே மனிதனை கேடயமாக்கி உன் மதத்தை  வளர்க்காதே சாதி எனும் தீயால் சமூகத்தை சாக்கடையாக்கிப் பார்க்காதே மறுபிறப்பை நம்பினால் மனிதனாய் மனிதநேயம் கற்றுக்கொள் சாதிப்பதை விட்டுவிட்டு சாதியை சமூகத்தை  இழக்காதே

சூரியனுக்கும் வெட்கமில்லை

சுட்டுவிட துடிக்கின்ற சூரியனுக்கும் வெட்கமில்லை எட்டும் திசையும் சென்றாலும் எங்கெங்கு  காணினும்  வெட்கமடா-இன்னும் தமிழனுக்கு தொடரும்  துக்கமடா உன்னை காணாத உயிரில்லை உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை கள்ளத்தனமாய்  செய்கிறான் கண்டபடி கொல்கிறான்- பக்சேவை உனக்கு தெரியாதா இத்தனை நாளாகியும் இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி உன்னத் துடிக்கும்-தமிழர்கள் உன்னையும்  வணகுவதாலோ நீயும் அவனும் சேர்ந்து நிம்மதி கெடுக்க நினைக்கும்  செயல் சரியா நேர்மை தவறல் முறையா-இன்னும் அவனை ஏன் காக்கிறாய் www,kaviyazhi.com

கவிதையின் மகளோ?

செப்பு சிலையா செதுக்கியவன் கலையா நித்திரையை கலைக்கும் நீலக் குயிலா கற்பனையை தூண்டிவிட்ட-நீ கவிதையின் மகளோ மேகமெல்லாம்  கூடிநின்று மேனியெல்லாம் நடுநடுங்க இடிமுழக்கம் வாழ்த்தொலிக்க இந்திரனே இறங்கி வந்து-உன்னை இணையாகி மகிழ்வானோ புரவிக்கூட்டமென புறப்பட்ட தேனீக்கள் தடம்மாறி நிற்பது உன்னுடல் வாசம் உறுத்தியதோ உன்னையே பூவாக நினைத்து-உடனே தேன்குடிக்க எண்ணியதோ கன்னியுன்னை காணவேண்டி கதிரவனே வருன்முன்னே கண்டுவிட்ட என்னோடு கண்ணசைத்து வருவாயா-என் கட்டுடலை அணைப்பாயா

காப்பீடு/இன்சூரன்ஸ்

காப்பீடுகள் மூன்று வகைப்படும் படியாக இந்திய அரசால்  காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் (INSURANCE REGULATARY DEVELOPMENT AUTHIRITY)முறைப்படுத்தப்படுகிறது 1,ஆயுள்  காப்பீடு(LIFE INSURANCE) ,2,பொதுக்காப்பீடு(GENERAL INSURANCE) ,3,பயிர் காப்பீடு (CROP INSURANCE) ஆயுள் காப்பீடு( LIFE INSURANCE) இது மனித உயிர்களை மட்டுமே காப்பீடு செய்யும் படி முறைப்படுத்தப்பட்டுள்ளது.விபத்தினால் உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு இழப்பு மற்றும் சேதாரம் ஆகியவற்றிக்காகவும் உத்திரவாதமளிக்கும்.ஆயுள் காப்பீடுக்காலம் முடியுமுன்னே இவ்வாறு நடந்தால் அவர்கள் நிர்யித்த தொகையில் சதவீத அடிப்படையில் உடலுருப்புக்காக இழப்பீடு தருவார்கள் உயிரிழந்தால்  நிரயிக்கப்பட்ட முழு தொகையும் இறந்தவரி குடும்பத்திற்கு அவர்தம்  வாரிசுகளுக்கோ குறிப்பிட்ட காப்புரிமை கேட்பவருக்கோ போய் சேரும் மேலும் தகவல்கள் நாளை தொடரும்..........

பனிபொழியும் அதிகாலை

நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே  வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை  நடந்துந்துவர முகம்  தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி வியந்து  வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் சத்தமமும் மலைச்சாரல்  தூறல்போல பனித்துளியும்  முகமலர்ந்து மங்கையால் மயங்கி நின்றதோ

ரசித்தவர்கள்