தீண்டத் தகாத மனிதன் யார்
பிணத்தை தின்பவனா இல்லை பெண்மையை அறியாத மனிதனா தினத்தை யறியாத பிறவியா தீண்டத் தகாத மனிதனா உழைப்பே இல்லாமல் ஒதுங்கியே உழைப்பவன் பணத்தை சுரண்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவனும் பாவத் தொழில் செய்யுபவனும் அடுத்தவன் பிழைப்பை கெடுத்து ஆயுளும் பணம் சேர்க்கும் அற்பப் புத்திக்காரன் அறிந்தே அன்றாடம் காய்ச்சியிடம் சுரண்டுபவன் பதுக்கலை பலவாறு செய்யும் தலுக்கு மேனியை வைத்து தகாத தொழில் செய்யும் இழுக்குப் பிழைப்பை செய்பவன் பிச்சைக் காரனிடமும் பிடுங்கும் எச்சில் பொறுக்கி கயவன் எந்த நிலையிலும் சாதி(தீ)யை எங்கும் சாதியை வளர்ப்பவன் பொய்யே பேசிப் பிறரையும் நம்ப வைக்கும் பூசாரி பாவம் தீர்க்க வருவோரிடம் பணம் கறக்கும் பொய்யாளன் வாழ்கையே வெற்றி டமாய் வாழ முடியாதோ ரிடமும் குழப்பிக் கூலி கேட்கும் கொடியோன் கொள்கை உடையோன் இவ்வாறான இழிநிலை கொண்டவனே அவ்வறுப்பேசி அடுத்தவனை பழிப்பான் அவனைக் கண்டு அஞ்சாமல் அவ்விடமே அடையாளம் காண்பீர்