Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......

உலகம் முழுவதும் அங்கங்கே உரிமைப் பிரச்சனை வருகிறதே உயிர்கள் பலவும் மடிகிறதே உயர்வும் அதனால்  தடுக்கிறதே கலகம் கலவரம் திருட்டுகளும் கயவர் கூட்டக் கொள்ளைகளும் கடிந்தே தினமும் நடக்கிறதே கவலை மனதில் தருகிறதே விலையும் தினமும் ஏறுவதால் விஞ்சிக் கவலைத் தருகிறதே பொன்னும் பொருளும் இல்லாமல் புலம்பும் நிலையே வருகிறதே திண்ணைப் பேச்சு இப்பொழுதே தினமும் வீணாய் போகிறதே பண்ணை எங்கும் காணாமல் பரந்த வெளியாய் இருக்கிறதே கவலை இல்லா வாழ்க்கைதனை கடக்கும் நிலையும் திரும்புமோ நிலைமை எப்போ மாறுமோ நிம்மதி மீண்டும் திரும்புமோ சண்டை என்றும் இல்லாமல் சமத்துவம் எங்கும் விரும்பினால் அனைத்துமே நிலைமை மாறிடும் அகிலமே அன்பால் செழித்திடும்

காதல்...நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்....

எல்லா வயது மனிதருக்கும் என்றும் தொடர்வது காதலாம் இல்லா நிலையில் உள்ளோர்க்கும் இனிமைத் தருவது காதலாம் ஏக்கம் கொண்டே எப்பொழுதும் ஏங்கித் தவிக்கும் காதலாம் தூக்கம் கெட்டும் தினந்தோறும் துணையாய் நிற்கும் காதலாம் சொல்லா மொழியில் உணர்ச்சிகளை சொல்லித் தருவதும் காதலாம் சொல்லே இன்றிப் பார்வையாலே சொல்லும் மொழியும் காதலாம் பார்த்த உடனும் வந்திடுமாம் பழகிப் பேசியும் மகிழ்ந்திடுமாம் பாசம் கொண்டே வளர்ந்திடுமாம் பகைமை இல்லாக் காதலாம் உண்மையை விரும்பும் காலமும் உணர்ச்சியை தூண்டும் காதலாம் உறவைவும் நட்பும்  வளர்வதற்கு உரிமைமைச் சொல்லும் காதலாம் காதல் நன்றே எப்பொழுதும் காசு பணத்தைப் பார்ப்பதில்லை காமம் இல்லா நட்புடனே கடைசி வரையும் தொடர்ந்திடுமாம் நேசம் அன்பு நட்புடனே நிறமோ மொழியோ பாராமல் நேர்மையான காதலே இறுதியில் நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்

சூரியனைக் காணவில்லை......

ஆஹா சூரியனைக் காணவில்லை  அதனால் அற்புதமாய் இருக்கிறதே சொற்பதமாய் சொல்ல இயலவில்லை சுகமாகத்தான் இன்று விடிகிறது வழியெங்கும் மழைத் துளிகள் வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள் துளித்துவரும் அந்த ஆசைகள் துவக்கம்தான் எத்தனைச் சுகம் அடிக்கடி என்னை வருத்தாதே அடியேன் மனதைக் கெடுக்காதே இடிக்குது நிலைமைக் கொல்லாதே இளமையின் துடிப்பைக் கொடுக்காதே எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது  தப்பேதும் இல்லைதான் ஆனால் தயக்கம் மல்லவா வருகிறது முப்போதும் மகிழ்ந்த நாட்கள் முடிவின்றி தவிக்கிறதே முறையா முன்பொழுதில் வருவது சரியா முறையான இனிமை உணர்வா மழையே மீண்டும் வா!வா!! மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!! இனிமை யுணர்வேப் போ!போ !! இரவில் மட்டும் ஹி!ஹி!!...

அம்மா உணவகம்-தியாகராய நகர்

Image
                அம்மா உணவகம்-தியாகராய நகர் முகப்புத் தோற்றம்                                                          விலைப்பட்டியல்  சுகாதாரமான முறையில் தயாரிக்கப் பட்ட பொங்கல் மற்றும் இட்லி சாம்பார்                                                                     அனைவரும்  உணவருந்தும் இடம்                                        மகிழ்ச்சியாய் சாப்பிடுபவர்கள்                                            உணவு தயாரிக்குமிடம்                                        சுகாதாரமான சுத்தமான குடிநீர் நான் கடந்த ஞாயிறு அன்று நடைபயிற்சிக்காக வழக்கமாக செல்லும் சென்னை  தியாகராய நகரிலுள்ள பனகல் பூங்கா சென்றிருந்தேன்.அங்கு எனது அன்பிற்குரிய நண்பர்.திரு.பெரியசாமி.(முன்னாள் வங்கி அதிகாரி) என்னிடம் அம்மா உணவகம் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிகொண்டிருந்தார்.அவர் சொல்வதைக் கேட்டதும் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் மனதில் அவ்வளவு சுகாதாரமும் தரமும் இருக்காது  என நினைத்திருந்தேன். அவர் எண்ணைக் கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றார்.நானும

வறுமைப் போக்கிட உதவுங்கள்....

காலைச் செய்திகள் படிப்பதில்லை கடமை சீக்கிரம் முடிப்பதில்லை வேளைதோறும் உணவையும் மறந்து விழுந்தேன் வலையில்  தினந்தோறும் முக்கிய நிகழ்வுகள் மறந்தாலும் முகப் புத்தகம் பார்ப்பதாலே முகமே பார்க்கா நண்பருக்கு முதலில் வணக்கம்  சொல்லுகிறேன் இடமோ ஊரோ தெரியாமல் இளமை முதுமை அறியாமல் இணைந்தே இன்றும்  நண்பர்களாய் இனிதாய் பழகி வருகிறேனே தலைமைப் பண்பும் வளர்த்திடவே தகவல் இணைந்தே பகிர்ந்திடவே தினமும் நடக்கும் நிகழ்வுகளே துணையாய் நமக்கு கிடைக்கிறதே வலையைத் தினமும் பாருங்கள் வாழ்க்கை முறையை நாடுங்கள் வறியவர் மாணவர் இல்லார்க்கும் வறுமைப் போக்கிட உதவுங்கள்

ரசித்தவர்கள்