தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி..


உருவம் செழித்தே இருந்தும்
உள்ளம் உணர்வை மறுத்தும்
பருவம் தொடரும் கனவில் 
பார்த்ததும் மனதில்  ஒளிக்கும்

பொல்லா இளமை கனவு
பொருந்தா நேரமும் வருத்தும்
இல்லா நிலையை உணர்ந்தே
எல்லா மகிழ்ச்சியும் பறக்கும்

வாலிபம் வாயிலைத் தட்டும்
வருவதை சொல்லி நிற்கும்
மேகலை நனைய கண்ணீர்
மேனியில் வழிந்தே நனையும்

பூமகள் மனதில் தினமும்
பூத்திடும் கனவுகள் கோடி
மாமகள் தருணம் நாடி
மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி...


                                                .பருவம் பதினெட்டில்........7

.8


.......(கவியாழி)....

Comments

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்