தெய்வங்கள்

தெய்வங்கள்

இழிபிறவி எடுத்தவர்கள்

ஏய் இழி பிறப்பே !

உச்சகட்டவெறியோடு
ஊரிலுள்ள பெண்களை
துச்சமென நினைத்தே
துரதித்துரத்தி கெடுத்தாயே-நீ
பிச்சையெடுத்தாலுமுன்
பிணியுணக்கு தீராது

எச்சியிலை நாய்கள்போல்
எக்குதப்பாய் கடித்திட்டு
இச்சையினை முடித்திட்டு
எவளருக்கே படுத்தாயே-தாய்
மிச்சஉயிர்போகுமுன்னே
மகன்வாழ வேண்டுமென்றும்

பிச்சிப்போட்ட இலையைப்போல்
பிரண்டியவள் தங்கையென்றே
மதித்திருந்தால்  இழிவாக
மடத்தனமாய் செய்வாயா ?
புத்தன் வாழ்ந்த பூமியிலே-பெண்ணை
புனிதமாக எண்ண வேண்டும்

இவ்வுலகில் எத்தனை நாள்
இன்னும் நீ இருந்தாலும்
இழிவுடனே பெரும்துயரை
இணைத்து நீ வாழ்ந்தாலும்
புத்திகெட்ட உன்செயலை-நீ
புலம்பி நாளும் திரிந்தாலும்

செத்தவனாய் நடைபிணமாய்
செழிப்பிழந்து அழிவாயே
செய்திட்ட தவறெல்லாம்
தினமுனக்கு பகையாகி
பித்தனாக திரிவாயோ
பிணமாகிப்போவாயோ !

கவியாழி.கண்ணதாசன்


Comments

  1. சவுக்கடி வார்த்தைகள் இது நடக்கும்...

    ReplyDelete
  2. அருமை
    இவர்கள்
    பித்தனாகத் திரியட்டும்
    பிணமாகிப் போகட்டும்

    ReplyDelete
  3. கழுவேற்றம் செய்ய வேண்டும்...

    ReplyDelete
  4. செத்தவனாய் நடைபிணமாய்
    செழிப்பிழந்து அழிவாயே
    செய்திட்ட தவறெல்லாம்
    தினமுனக்கு பகையாகி
    பித்தனாக திரிவாயோ
    பிணமாகிப்போவாயோ !//

    நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. அறம் பாடியிருக்கிறீர்
    பலிக்கும்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்