அவள்தான் மனைவி........
வாலிப வயது வந்தவுடன் வாழ்கையை முடிவு செய்து வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய் வாழ்ந்திட துடித்திடுவாள் பெற்றோரின் முன்னிலையில் பேரின்பம் காண வேண்டி பொறுமையாய் இருந்திடுவாள்-ஆதலால் பெண்மையை காத்திடுவாள் திருமணம் முடிந்ததும் திரும்பியே கையசைத்து விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன் விருப்பமுடன் சென்றிடுவாள் எண்ணியதை தந்திடுவாள் எண்ணமதை அறிந்திடுவாள் கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின் கண்மூடி விளையாடி டுவாள் பொன்னே மணியே என்று போதையை ஏற்றிடுவாள் பெண்மையை தருவதற்கு-நித்தம் பொறுமையை வென்றிடுவாள். அன்புடன் தந்திடுவாள் ஆசையாய் உணவளிப்பாள் அத்தனையும் பகிர்ந்துவிட்டு அருகிலேயே துணையிருப்பாள் அவள்தான் மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!