Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நேர்மையே நிம்மதி

நேர்மையாய் வாழ்வதனால் நிம்மதியேக் கெட்டிடாது நெறிகெட்டு வாழ்வதாலே நெடுந்துயரம் தவிர்த்திடாது பாடுபட்டுச் சேர்த்தப் பொருள் பயனின்றி வீண்ப்போகாது பழிசொல்லால் உண்மை பயங்கொண்டு ஓளிந்திடாது கடின உழைப்புக்குப் பலன் கண்டிப்பாய் மறைந்திடாது கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம் கடைசிவரைத் தீர்ந்திடாது குறுக்கு வழியில் நடத்தும் குடும்ப வாழ்க்கை இனித்திடாது கூ  ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை கடைசிவரைக் கைவிடாது

புது மொழிகள்-நிஜமா?

புதுமொழிகள் எதிர்பார்த்த நேரத்தில் உதவிக் கிடைக்காவிடில் அவன் ஏழையாகக் கருதப்படுவான். அடுத்தவனைக் கெடுத்து ஆயிரங்கள் பலசேர் ஆயுள்வரை  தவறில்லை. கொடுத்து வாழ்வதை விட பிறரை கெடுத்தும் வாழ் துயரில்லை. உதவி கேட்பவன் தகுதியைப் பார்  உலகை தெரிய அறிவுரை கூர். வட்டித் தொழில் மட்டுமே  பணம் உழைக்காமல் கிடைக்கும் பாவம் செய்யாதவன் பைத்தியம் பரிதாபமாய் விரட்டி விடு. குறுக்குவழியே கோடி நன்மை குடிவளர்க்கும் உண்மை பதுக்குறவன் ஊர் போற்றும் புத்திசாலி பதுக்காதவன் முட்டாளாய்  ஏமாளி திருடி வாழாதான் வாழ்க்கை இறுதியில் தினமும் தொடரும் கஷ்டம்தான்

கோழையாக சாகிறான்.

பணம் உள்ளவன் பதுக்கி வாழுறான் பாசத்தை மறந்து பணத்தையே காக்கிறான் குணம் உள்ளவன் கொடுக்க நினைத்தும்-இல்லாமல் குடும்ப நலனை மட்டும் பார்க்கிறான் கள்ள வழியில் காசுப் பார்கிறான் கண்டபடி செலவும் செய்யுறான் உள்ளபடி சொல்ல போனால் -நேர்மையற்ற ஊழியத்தை  தொழிலாகச் செய்யுறான்   நல்லவரைக் கண்டு நையாண்டி செய்யுறான் நாலுகாசு பாதுகாக்க நாயைபோலக் காக்கிறான் இல்லாததை  ஏளனமாய் சொல்லுறான்-இறுதியில் இல்லாமை அறிந்து சொன்னார்கள் என்கிறான் சொந்தமும் பந்தம்மும்  சுற்றம் மறந்து சொத்து நிறைய  சேர்த்து வைக்கிறான்  எந்த உணவும் தின்ன முடியாது-நோய் வந்ததாலே மாத்திரை மட்டுமே  திங்குறான் சின்னப் புத்தியால் செய்வதை மறக்கிறான் சிறந்தோரை  இழந்து   சாபத்தையும் சேர்கிறான் உள்ளபடிச் சொல்லப்போனால் உறக்கமின்றி-கோழையாக ஊர்வாயை உலைவாயை கொண்டே சாகிறான்

அந்த நேரங்களில்.......

யாரும் பார்க்காத  நேரத்தில் எப்படி நீ முத்தமிட்டாய் நான் பேசாமல் இருந்தபோது பிறகெப்படி கட்டியனைதாய் தூங்காமல் நடிக்கும்போது ஏன் துணையாக சேர்த்தனைதாய் தீண்டாத நேரத்தில் நீ தீயைஏன்  தூண்டிவிட்டாய் வேண்டாமென நினைத்தபோது வேண்டுமென்று அடம்பிடித்தாய் வேண்டியதை  தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறாயே தூண்டிலில் மண்புழுவாய் துடிக்கவைத்து ரசிக்கிறாயே இருநிமிட மௌனத்தில் இடையிடையே கதைபடித்தாய் இன்னுமின்று வேண்டினாலே எதையோ பார்த்து சிரிக்கிறாயே

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு  என்ற பழமொழி  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே  இருப்பினும் இன்றைய தலைமுறையினரில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் எனக்கு தெரிந்த சிலவற்றை உதாரணங்களுடன்  இங்கு கூற உள்ளேன்.  அவசரக்காரனும் ஆத்திரக்காரனும் ஒண்ணுதான் .அதனால்தான் புத்தி மட்டு என்று சொல்கிறார்கள் மட்டு என்றால் குறைவு அதாவது அறிவு குறைவு என்று அர்த்தம். அவசரத்திலும் ஆத்திரத்திலும் செய்யும்  செயல்கள் சரியான முடிவைத்தராது. திட்டமிடல் இல்லாததனால் எல்லாமே நிகழ்வுகளும் நிச்சயமான வெற்றியைத் தராது.அதனால் யோசித்து செய்யும் செயல்கள் சரியாய் இருக்கும். தொழில் ,படிப்பு ,பயணம்,ஆராய்ச்சி,படிப்பில் ஆர்வமுள்ள அனைவருமே திட்டமிட்டு  நல்ல வெற்றியை பெறுகிறார்கள் அதனால் அவர்கள் செய்த உழைப்பு எல்லோருக்குமே பயனுள்ளதாய் இருக்கும்.இதில் ஆத்திரமோ அவசரமோ இல்லாததினால் எல்லாமே வெற்றியை முடிகிறது ,இங்கு அவசரமாய் எந்த முடிவும் எடுப்பதில்லை ஆழ்ந்து  சிந்தித்து செய்கிறார்கள்  பெரும்பாலான அசம்பாவிதங்கள் கொலை.கொள்ளை , கற்பழிப்பு ,திருட்டு போன்றவைகள் இங்கு நான் குறிப்பிட்டபழமொழிக்குப்பொருந்தும். குறிப்பிட்ட எல

பருகச்சொல்லி அழைப்பாரா.....

இமை இரண்டும் சேர்ந்திருக்க இதழிரண்டில் தேனொழுக அமைதியான ஆற்றலுடன் -அவன் அடியெடுத்து வைத்தவுடன் தடைசொல்லி மறுப்பாரா தயவினையும் வெறுப்பாரா இடையிடையே சிணுங்கி-இன்பமதை இறுக்கமின்றி விடுவாரா சிரிப்புடனே செவ்விதழை சினுங்காமல் கடிப்பாரா சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து சினத்துடனே இழப்பாரா கதை தொடர காத்திருந்து கதவை மூடி வைப்பாரா படையெடுத்து வருபவரை-ஏற்று பாங்குடனே வைப்பாரா பத்துமாதம் முடியுமுன்னே பாசமதை தடுப்பாரா பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை பருகச்சொல்லி அழைப்பாரா

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.       விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.       எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.       அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவ

ரசித்தவர்கள்