சித்திரையே வருக
சித்தரை மாதமே சீக்கிரம் வா சிந்தனை அதிகம் எனக்குத் தா நித்திரை கெட்டுப்போவதாலே-கவிதை நிறைய எழுத நிம்மதித் தா அதிக மழைபொழியும் ஆடியில் அன்பாக இருந்து உருவாகி அறிவாக பிறந்த நீ-அன்பால் அடிமையாக்க அசைந்து நீ வா தவறாக சொல்வோர் இருப்பார் தை மாதம் பிறப்பு என்பார் மைகொண்ட உன் விழியால்-எம்மை மகிழ்ச்சி கொடுக்க நீ வா கோடை வெயில் கொளுத்தினாலும் குறைச் சொல்லி யுன்னை மறுக்காமல் முக்கனியும் சக்கரையும் வைத்து-உன்னை முழுமனதோடு வரவேற்கிறேன் நீ வா இன்னலைத் தீர்க்க இன்று வா ஈழத்தில் அமைதி நிலவ வா இனிமையான சித்திரையே வா-தமிழர் இன்னலைத் தீர்க்க ஓடி வா மழையோடு சேர்ந்து நீ வா மகிழ்ச்சியாய் பொழிந்து நீ வா மக்களின் துயர் நீக்க வா மனிதநேயம் காக்க மீண்டும் வா