அன்னையர் தின வாழ்த்துக்கள்
என்னையே ஈன்ற எனக் குயிரீந்த கல்லே யல்லாத கடவுள்கள் நீவீரே அன்னையின் சேவையை அருகில் செய்யும் திண்ணைப் பாட்டியும் தேடும் தெய்வமே உண்மை உணர்ந்து உள்ளம் உவந்து செவ்வனே செய்யும் செவிலியரும் அன்னையே பிள்ளையாய்ப் போற்றி படிப்பைக் கொடுத்து நல்லொழுக்கம் தந்த ஆசிரியரும் உண்மையே அருகருகே படித்தாலும் அன்பாய் பழகிய பள்ளித் தோழியரும் பண்பில் அன்னையே என்னையும் ஆணாய் எடுத்துச் சொன்ன மனைவிக்கும் இன்று நன்றி சொல்லுவோம்