மனதிலே அன்பிருந்தால்...
இப்போது வணங்கும் இறைவனே முற்போது வாழ்ந்த மனிதனே வெவ்வேறு வுருவில் வணங்குவர் வேதமும் சொல்லுமெனக் கூறுவர் கல்லாக வீசுகின்ற காற்றாக இல்லாத உருவாய் கூறுவர் நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி நேரில் வந்ததாய் கூறுவர் கல்லாமை இல்லாதோர் வணங்கிடும் இல்லாத உருவமே கடவுளே பொல்லாத வைத்தியம் சொல்லுவர் பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர் இயற்கையே கடவுள் என்றிருந்தால் எதற்குக் கோயிலும் குருக்களும் அதற்குப் அன்றாடம் பூசையும் ஆடும் கோழியும் வேண்டாமே இல்லற வாழ்வை துறந்துதான் இறைவனைக் காண முடியுமானால் இறைவனின் தூதனாய் இருப்பவரும் இல்லறம் தவிர்த்து இருக்கலாமே மனதிலே அன்பைக் கொண்டிருந்தால் மனிதனை நண்பனே என்றிருந்தால் துணிவையே மனதினில் வளர்த்திருந்தால் துணைக்கு சாமியும் வேண்டுமா