வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....
அயல்நாட்டு முதலீடும் ஆலைகள் பல முடுவதும் நாறிக் கிடக்குது விதியென்று நான் சொல்ல நா கூசுது...... பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார் பொறுமையும் வேண்டு மென்கிறார் வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார் வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார் எத்தனையோ தொழில்கள் முடங்கியதை ஏதுமே அறியாதவராய் இருக்கிறார் ஏற்றத் தாழ்வும் இருந்தாலும் ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார் பண்ணாட்டு வணிகத்தால் பணமும் பலருக்குமே வேலை இழப்பும் உள்நாட்டு மக்களின் தவிப்பும் உள்ளபடி நல்லதாய் படிக்கிறார் அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார் அனைவருக்கும் உள்ளதாக சொல்கிறார் வரிகளையே உயர்த்திக் கூட்டி வருடந் தோறும் சேர்க்கிறார் வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய் வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார் வாழ்வதற்கு மட்டும் கஷ்டமான வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்