தெய்வங்கள்

தெய்வங்கள்

வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....


அயல்நாட்டு முதலீடும்
ஆலைகள் பல முடுவதும்

நாறிக் கிடக்குது விதியென்று
நான் சொல்ல நா கூசுது......
 

பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார்
பொறுமையும் வேண்டு மென்கிறார்
வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார்
வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார்

எத்தனையோ தொழில்கள் முடங்கியதை
ஏதுமே அறியாதவராய் இருக்கிறார்
ஏற்றத் தாழ்வும் இருந்தாலும் 
ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார்

பண்ணாட்டு வணிகத்தால் பணமும்
பலருக்குமே  வேலை இழப்பும்
உள்நாட்டு மக்களின் தவிப்பும்
உள்ளபடி நல்லதாய் படிக்கிறார்

அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார்
அனைவருக்கும் உள்ளதாக  சொல்கிறார்
வரிகளையே உயர்த்திக் கூட்டி
வருடந் தோறும் சேர்க்கிறார்

வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய்
வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார்
வாழ்வதற்கு  மட்டும் கஷ்டமான
வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்



Comments

  1. கேட்பதோடு சரி... உண்மையை காண்பதில்லை... ஏன் ?நினைப்பதே இல்லை... அதனால்...........

    ReplyDelete
    Replies
    1. ஆம்.மக்களைப் பற்றிக் கவலையில்லை .மக்களவை மட்டுமே தொலைநோக்கு எல்லை

      Delete
  2. இங்கு அரசியல் வாதிகள் பிழைத்தால் மட்டும் போதும்

    ReplyDelete
    Replies
    1. மக்களைப் பற்றிக் கவலையில்லை மக்களவைப் பற்றித்தான் கவலை

      Delete
  3. கவிஞர் அப்துல் ரகுமானின் ...வெளியேறு என்றால் எருமையே வெளியேறாது ,வறுமையா வெளியேறும் ...என்கிற கவிதை வரிகளை நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பகவான்.எல்லோருமே இந்நாட்டின் மன்னர்கள்தான் அதாவது ஏழைகள்தான் அரசியல்வதிகலித் தவிர.ஆம்

      Delete
  4. வாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
    வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்

    வஞ்சகர் வலை வீச்சு ..!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது நானும் வாழ வேண்டுமே

      Delete
  5. .. வாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
    வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார் ..

    சரிதான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

      Delete
  6. வாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
    வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்
    >>
    உங்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்கும்தான்

    ReplyDelete
    Replies
    1. வாழ்க ஜனநாயகம் என்று மட்டும் சொல்லுங்கள்

      Delete
  7. கஷ்டமான வாழ்க்கையைத்தான் இஷ்டப்பட்டு வாழ் வேண்டியதாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. காலத்தின் கட்டாயம் என்ன செய்வது

      Delete
  8. ம்..பட்டையக் கெளப்புங்க..

    ReplyDelete
  9. நல்ல சிந்தனை சகோ!
    வாழ்த்துக்கள்!

    தேவை இருந்தாற்தான் தேடும் முயற்சி வரும்...

    வாழ்க்கையில் கஷ்டமும் இருந்தால்தான்
    அதைப் போராடி வெற்றி கொள்ள ஆவலும் வரும்.!

    ReplyDelete
    Replies
    1. நிறையபேருக்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது

      Delete
  10. அவர் எவர் கவிஞரே!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் தெரிந்த நல்லவர்.

      Delete
  11. பணத்தை மட்டுமே நோக்கி ஓடும் வாழ்க்கையில் எந்தவித இன்பமுமேயில்லை.களைப்புமட்டும்தான் !

    ReplyDelete
    Replies
    1. மனமில்லாதோர் சேர்ப்பது பணம் மட்டுமே என்பதுதான் உண்மை

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more