Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

வாலி நீ கடலாழி....

Image
                  ( நன்றி)   வாலி நீ..... கடலாழி பாட்டில்... பண்பில் வறுமை சொல்லா கவிஆழி பண்ணும் பாட்டும் படைப்பாய்நீ பகுத்தறிவும் சொன்ன பெரியார்நீ இளமை துடிப்பில் என்றுமேநீ ஈடில்லா கவிமழை தந்தாய்நீ ஆண்டவன் கட்டளை அறிந்தவன்நீ அன்னைத் தந்தையை மதித்தவன்நீ கவிதைப் படைப்பில் வல்லவன்நீ தமிழுக்குஅணிகலன் சேர்த்தாய்நீ எப்போதும் ...... எல்லோர் மனதிலும் தமிழாய் வாழும் கவிஞன்நீ

வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....

அயல்நாட்டு முதலீடும் ஆலைகள் பல முடுவதும் நாறிக் கிடக்குது விதியென்று நான் சொல்ல நா கூசுது......   பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார் பொறுமையும் வேண்டு மென்கிறார் வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார் வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார் எத்தனையோ தொழில்கள் முடங்கியதை ஏதுமே அறியாதவராய் இருக்கிறார் ஏற்றத் தாழ்வும் இருந்தாலும்  ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார் பண்ணாட்டு வணிகத்தால் பணமும் பலருக்குமே  வேலை இழப்பும் உள்நாட்டு மக்களின் தவிப்பும் உள்ளபடி நல்லதாய் படிக்கிறார் அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார் அனைவருக்கும் உள்ளதாக  சொல்கிறார் வரிகளையே உயர்த்திக் கூட்டி வருடந் தோறும் சேர்க்கிறார் வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய் வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார் வாழ்வதற்கு  மட்டும் கஷ்டமான வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்

ஆழ் மனது ....

ஆழ்ந்த மனதுக் குள்ளே அன்புடன்  கோபமும்  இருக்கும் ஆனாலும் அப்பப்போ வெடிக்கும் அதனால் மனது வலிக்கும் தாழ்ந்த நிலையினால் அது தன்னையே தரம் தாழ்த்திவிடும் தானாகப் பேசவும் ஏசவும் தனிமையை நாடிக் கொல்லும் வீணான கற்பனையை வளர்க்கும் விவேகமற்ற வேதனையைத் தரும் வீண்பேச்சு ஏளனத்தை மதிக்கும் விடிவில்லா சந்தேகம் வகுக்கும் ஆண் பெண்களைச்  சேர்க்கும் ஆபத்தில் கொண்டுவிடும் ஊன் உறக்கம் தவிர்க்கும் உடன்பாடு இல்லாதுப்  பிரிக்கும் தான் கெட்டு தவித்தும் தனைச்சார்ந்தோரையும் கெடுக்கும் வீணான மனபிழற்ச்சி தரும் வேதனையும் இழப்பும் மிகும் ஏனிந்த மனநிலை இறைவா எப்படி தவிக்கிறார்  புரியுமா தவிர்க்க வழிதான் தெரியுமா தவிப்போரைக் காப்பாற்ற முடியுமா

தட்டச்சும் கணினி அனுபவமும்

                    எனது மலரும் நினைவுகளை மீண்டும் மீண்டும் வரும் சுவையான தருணங்களை   சொல்ல வேண்டும்  என்று திருமதி.சசிகலா அவர்கள் கேட்டுக் கொண்டதால் அவரின் விருப்பத்தின் பேரிலேயே  மீண்டு வருது.                       நான் வளர்ந்தது படித்தது  எல்லாமே சேலம்.வசித்தது அழகாபுரம்  ஐந்து ரோடு பகுதியில்.எல்லோரரையும் போல கல்லூரியில் சேர்ந்தவுடன் என்னையும்  தட்டச்சு பயில வேண்டி என்னையும் 1980 ஆகஸ்ட் மாதத்தில்அனுப்பினார்கள்.                   எல்லோருக்குமே அந்த வயதில் மாணவ மாணவியராய் சேர்ந்து படிக்க அதாங்க தட்டச்சு பயில அருகருகே அமர்ந்து  பேச  மிரட்சியும் விருப்பமும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா ?.நானும் நாள்தோறும் மாலைநேரம் தவறாமல் வேறு எங்கும் ஊர்சுற்றப் போகமால் செல்லுவேன்.                     அப்போதுதான் கணினிப் பற்றி எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது காரணம் நான் வரலாறு படைப்பிரிவை சேலம் அரசு கலைகல்லூரியில் படிப்பதால் எனக்கு தெரிந்திருக்கவில்லை.தட்டச்சு பயில வரும் மாணவ மாணவியர் சேர்ந்து கொண்டு அதைப்பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்  எனக்கு ப

அடிக்கடி மழைத்துளி

அடிக்கடி மழைத்துளி அணைத்திட துடிக்குது கடிக்கிற எறும்புமே கடையிலே கடிக்குதே ... இடுப்பிடை மடிப்பிலே அணைக்கிற போதிலே இருதயம் படபடவென அடிக்கடித் அடிக்குதே சிலுசிலு மூச்சிலே சேலையும் நழுவுதே சேர்கிற நேரத்தை சீக்கிரம் கேட்குதே விரலிடை மேனியில் மேகலை தேடுதே படர்ந்திட ஆசையில் படருதே தழுவுதே தொடத்தொட வெட்கமே துவழுதே தூண்டுதே சடசட மழையிலே சாந்தியும் அடையுதே

ரசித்தவர்கள்