Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே நாவடக்கம் தேவை என்பதால் நாகரீகம் என்ற பெயரில் நா சுவைதரும் கொழுப்பும் நேரம் கடந்த தூக்கமும் நிம்மதி யில்லா மனமும் ஆண்மையின் ஆசை துறந்தும் அலுவலில் பணி அதிகரித்தும் பணமே  வாழ்க்கை என்ற பணியில் ஓய்வில்லா உழைப்பும் பகலிரவு அலைச்சல் இருந்தால் பசியும் குறைந்தே நோயேமிகும் நயவஞ்சகம் செய்வோரின் நட்பும் நலிந்தோரை இழிந்து பேசுதலும் நல்லோரின் நட்பை மறந்தே நாளும் குடித்தே இல்லாமல் இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும் இல்லறம் போற்றும் நல்லொழுக்கம் இணைந்தே  வாழும் குடும்பம் இன்முகமாய் எப்போதும் இருந்து தியானமும் தொடர்ந்து செய்து திடமாய் வாழ யோகக்கலையுடன் மனமே விரும்பும் கடவுளை மகிழ்ந்தே வணங்கி வந்தால் இனமே செழிக்க வளர்க்க இன்னுமே சிறப்பாய் வாழலாம் இனிமையாய்   நல்லதைச் செய்யலாம் இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம் ````````````````````கவியாழி``````````````````

ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை அப்படி இருந்தும் சாதியாடா அப்பனும் பாட்டனும் அறியாமல் அன்றே வளர்த்தத் தீயடா நித்தமும் உழைத்தே வாழ்கிறாய் நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய் புத்தமும் சொல்லும் போதனையை புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய் கற்பனை வாழ்க்கை அறுதியில்லை கண்டதும் கேட்பதும் உண்மையில்லை அற்பனாய் வாழ்ந்திட முயலாதே அடிமை கொண்டே  வருந்தாதே உயர்வு தாழ்வு பார்க்காமல் உன்னில் வேற்றுமை காணாமல் உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய் ஒழுக்கம் நன்றே முதலீடாய் கற்பதை நன்றே புரிந்துகொண்டு காப்பாய் நீயும் அமைதிகொண்டு இனத்தில் நாமும் தமிழனாக இந்தியத் தேசத்தின் புதல்வனாக உணர்வாய் மனதில் முதல்வனாக ஒற்றுமை கொள்வோம் மனிதனாக

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன் இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன் மார்புக்குள் அவளை அணைத்தேன் மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள் சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள் செழுமையாய் உரிமையாய் இணைந்தே சேதியை முடித்தேன் ருசித்தேன் பூவுக்குள் தேனை எடுத்தேன் புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள் தூறலும் நின்றது மகிழ்ச்சியாய் தூரத்தில் தெரிந்தது வானவில் மார்புக்குத் திரைப் போட்டு மனதிலே அசைப் போட்டு ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள் உண்மையான சிறந்த நாட்களே யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும் பணத்தை மதிக்க மாட்டேன் பணத்தாசை இல்லா நானும் பணத்தால் அடிமை ஆகேன் இனிமைப் பேசத் தயங்கேன் இன்முகம் காட்ட மறவேன் இழித்தே எளிதில் பேசேன் இறைவனை அதற்க்காய் தேடேன் நல்லோரை  வணங்கி  மகிழ்வேன் நாளும் சென்றுப் பார்ப்பேன் நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க நல்லதை சொல்லியே வருவேன் பொல்லாதோர் நட்பை மதியேன் பொய்யாக எதையும் சொல்லேன் புகழுக்கு அடிமை ஆகமாட்டேன் புரிந்தோரைக் கைவிட மாட்டேன் உள்ளத்தில் நட்பை வைப்பேன் உண்மையில் அன்பைப் பகிர்வேன் உரிமையாய் குறைகளைச் சொல்லி உண்மை நட்பை வளர்ப்பேன் ````````````கவியாழி```````````

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில் மேகத்தின் மேனியெல்லாம் தழுவி கன்னலென இருந்தக் கார்மேகத்தை வண்ண ஒளிவீசிச் சிரித்தாள் எண்ணம் எனக்கோ தெரியாமல் என்ன சொல்வதெனப் புரியாமல் சின்ன விழியிரண்டை மூடினேன் சில்லென்ற காற்றில் தேடினேன் கன்னம் சிவந்த கயல்விழியால் கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள் தின்ன மறந்த தேன்பலாவின் திகட்டாத சுவையை மறுப்பேனா இன்னும் வேண்டுமென எப்போதுமே இனிமையான சுவையைத் தீண்டியே உண்ண விரும்பும் அவளை உதறித் தள்ளி விடுவேனா ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின் ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா ஓய்வாய் அருகில் அமர்ந்தேன் ஒருகிழி நடுவில் கிழித்தேன் இடைவெளி.........

ரசித்தவர்கள்