பகட்டு வாழ்கையால் பயனேது ?
ஆயிரம் பலதும் சேர்த்தாலும் ஆயுளும் அதிகம் இருந்தாலும் ஆலயம் தோறும் பணமாக ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும் ஊரும் பெரும் செல்வாக்கும் உயர்ந்த பொருளை கொண்டாலும் உற்றார் அருகில் இல்லாத உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா பேரைச் சொல்லி அழைத்திடவும் பேதைமை இன்றி பழகிடவும் நாளும் அருகில் மகிழ்வுடனே நல்ல நண்பர்கள் வேண்டுமடா வாடா போடா என்றழைக்க வாழ்ந்த கதைகளை தெரிவிக்க ஆத்தா அப்பனும் அருகிலின்றி ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா சுற்றமும் சொந்தமும் துணையின்றி சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும் பற்றும் பாசமும் கிடைக்காத பகட்டு வாழ்க்கையால் பயனேது (கவியாழி)