இனிப்பான மனிதர்கள்
வெள்ளைச் சோறு மட்டுமே விரும்பி உண்டு வந்தோர் வேதனையாய் இன்று ஏனோ வேண்டாமெனத் தள்ளி வைத்து பச்சைக் காய்கறிகள் தின்று பகல் வருமுன்னே விழித்து பாதம் வலிக்க நடந்தும் பயிற்சிகள் பலவகை செய்தும் உணவைக் கொஞ்சமாய் குறைத்து உலர் பழங்கள் அதிகம் சேர்த்து உண்டதை எல்லாமே மறந்து உடலை வருத்தியே தினமும் காலை மாலையென பகிர்ந்தே கணக்காய் உணவைத் தின்று வேளை வரும்போது மாத்திரையை வேதனையுடன் தின்று வாழும் இனிப்பை மறந்தும் இனிமையாய் இன்னும் மன உறுதியுடன் சிறப்பாய் வாழ்ந்து வரும் சொந்தங்களே நட்புகளே வாழ்க (கவியாழி)