தெய்வங்கள்

தெய்வங்கள்

சுதந்திரம் எமக்கும் வேண்டும்



வேண்டும் வேண்டும் மனதில்
வேதனை மறைந்திட வேண்டும்
தாண்டும் உயரம் யாவும்
தடைகளைத் தாண்டிட வேண்டும்

சுதந்திரம் எமக்கும் வேண்டும்
சூழ்நிலை மாறிட வேண்டும்
மனிதருள் ஒற்றுமை வேண்டும்
மகிழ்ச்சியைப் பகிர்ந்திட வேண்டும்

வாழ்வில் நிம்மதி வேண்டும்
வசந்தமும் மீண்டும் வேண்டும்
வலையில் மீண்டும் எழுதும்
வாய்ப்புகள் தொடர்ந்திட வேண்டும்

மீண்டும் மீண்டும் உங்களை
மகிழ்ச்சியாய் சந்திக்க வேண்டும்
தீண்டும் பணிகள் யாவும்
தீர்ந்திட நிம்மதி வேண்டும்



அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்

(கவியாழி)

Comments


  1. வேண்டும், வேண்டும் தாங்கள் மீண்டும் எழுதிட வேண்டும்.
    சுதந்திரதின வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எழுத முயற்சி செய்கிறேன்

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரா !
    எண்ணிய எண்ணமது ஈடேற வேண்டும் தமக்கும் அது மண்ணினில் பெருமைதனைத் தக்க வைக்க வேண்டும் என்றே நானும் வாழ்த்தி மகிழ்கின்றேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

  3. வணக்கம்!

    வண்ணத் தமிழில் வளமாய் வடித்திட்ட எண்ணம் சிறக்கும் இனி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

  4. வணக்கம்

    தமிழ்மணம் 2

    ReplyDelete
  5. அருமை! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. வருக வருக! வெகு நாட்கள் கழித்து வருகை!

    அழகான கவிதை நண்பரே!

    ReplyDelete
  7. கவிதை நன்று ஐயா...
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. வலையில் மீண்டும் எழுதும்
    வாய்ப்புகள் தொடர்ந்திட வேண்டும்

    நிலையில் மாற்றம் வருமே!
    நிம்மதி ஏற்றம் தருமே!

    ReplyDelete
  9. பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்தெழ வாழ்த்துக்கள் !
    த ம 6

    ReplyDelete
  10. வளமான எண்ணம் வரமானா(ல்) என்றும்
    நலமான நாளாம் நமக்கு!

    மிக அருமை! நடப்பவை யாவும் நலமாக
    இனிய வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. கவிஞருக்கு விடுதலை! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வலைப்பக்கம் வந்த கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு இனிய சுதந்திர வாழ்த்துக்கள்!
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. அலுவலக இலக்குகளை முதலில் அடைந்து முடியுங்கள். பிறகென்ன, விடுதலைதான்! எழுத உட்கார்ந்தால் வந்துவிட்டுப் போகிறது கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்