தெய்வங்கள்

தெய்வங்கள்

பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !



உலகில் தோன்றும் உயிர்கள் யாவும்
இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும்
உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை
குறையாய் எண்ணி கொடுமை செய்தே !
கருவில் வளரும் சிசுவை அறிந்தும்
கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார்
உருவாய் வளர்ந்து  மகளாய்ப் பிறந்தால்- உடனே
உயிரையும் எடுப்பார் உணர்வை  இழந்தே !!
கடவுள் உருவாய் கருணை மழையாய்
காலையும் மாலையும் பாலைத் தந்திடும்
பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார்
பாலை மட்டும் உணவாய்  கொண்டே !!!
பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே
பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே
சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில்
சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!!
------- கவியாழி-------

Comments

  1. சுயநல மனிதன் செய்யும் கொடுமைகள்.

    ReplyDelete
  2. அவர்கள் மனிதர்களே அல்ல...

    ReplyDelete
  3. பிரபு காளிதாஸ்28 June 2018 at 12:16

    வணக்கம் திரு கண்ணதாசன் அவர்களே
    அருமையான கவிதை

    தங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் கவியாழி என்பது உங்க சொந்த ஊர் பெயரா ?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு நன்றி.கவியாழி என்ற பெயரை நானே வைத்துக்கொண்டேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்