மீண்டும் அந்தநாள் வாராதோ !
11.03.1990 அந்தநாள் ஞாபகம் 11.03.2013 அன்றும் வருவதால் வாழ்ந்த நாள் எண்ணிக்கையில் வருடம் இருபத்து மூன்றாகிறது கொஞ்சநாள் வாழ்க்கையில்லை குறைவான மகிழ்ச்சியில்லை நிறைவான நாட்களிலே-எங்களுக்கு நெடுந்தூரப் பயணமிது எல்லாமும் பார்த்துவிட்டோம் ஏழ்மையைத் தாண்டிவிட்டோம் எங்களுக்கு ஒரே பெண்ணென-இறைவன் எழுதியதாய் நிறுத்திவிட்டோம் தொலைவானப் பயணத்திலே தோல்விகளும் பார்த்திருந்தும் இனிதான வாழ்க்கைக்கு-இனியும் இணைந்தே வாழ உள்ளோம் இந்நாளில் எல்லோரும் இனிய வாழ்த்துச் சொல்லி இனிவரும் நாட்களையும்-சேர்ந்து இன்பமாக்க வாழ்த்துங்களேன்