தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால்
கஷ்டமும் தருவானா?

கயவர்கள் நிம்மதியாய்
காசு பார்க்க விடுவானா?

திருடன்  துரோகிஎல்லாம்
தைரியாமாய் திரிவானா?

காசு பணத்திற்காக
கள்ள தொழில் செய்வானா?

இல்லாதவன் ஏங்குகிறான்
இருப்பவனோ  பதுக்குகிறான்

உள்ளதை சொல்பவன்
உயர்வின்றி தவிக்கிறான்

நல்லவனாய் இருப்பவன்
நாளும்  மனதால்இறக்கிறான்

பொல்லாங்கு சொல்பவன்
புகழோடு இருக்கிறான்

உனக்காக செய்வதை
ஏழைக்கு கொடுக்கசொல்!

உயர்வாக உன்னிடம்
ஒழுக்கத்தை பயிலசொல்!

தனக்காக உள்ளதுபோக
தருமம் செய்யச்சொல்!

மனித நேயம்  மறக்காமல்
மனிதனை இருக்கசொல்!

மனிதனாக இருக்க
மனிதாபிமானம் மதிக்கசொல்!

பெற்றோரை,மற்றோரை
மாண்புடனே மதிக்கசொல்!

தனியொழுக்கம் கற்றுதந்த
ஆசிரியரை மதிக்கசொல்!!!

(கவியாழி)
21.12.2012 ன் மறுப்பதிவு

Comments

  1. வணக்கம்
    ஐயா

    சொல்லிய வரிகள் அறிவு மிக்கவை....பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நீங்களும்வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/ தங்களின் மேலான
    கருத்தினை தருக

    ReplyDelete
  3. உண்மை வரிகள்.

    ReplyDelete
  4. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இனிய நடையில் எளிய தமிழில் தத்துவார்த்தமாய் விளக்கிச் சென்றமைக்கு நன்றி!
    த ம 2

    ReplyDelete
  6. அழகிய பொருள்பட வரிகள்! நண்பரே!

    ReplyDelete
  7. "தனியொழுக்கம் கற்றுதந்த
    ஆசிரியரை மதிக்கசொல்!!!" என்பதை
    இன்றைய இளசுகள் உணர வேண்டுமே!
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?
    கடவுள் காப்பாற்றபட வேண்டிய ஆளாக
    மின்சார வேலிக்குள்...
    துப்பாக்கி ஏந்திய காவலரின் காவலுக்குள்
    தனது பாதுகாப்பிற்கே உத்தரவாதமின்றி
    பயந்து கொண்டு இருக்கின்ற பொழுது...
    நல்ல கேள்வி கேட்டீர்கள்...!
    கடவுள் இருந்தால்
    கஷ்டமும் தருவானா?
    அவனுக்கே கஷ்டகாலம் இது...!
    மனித நேயம் மறக்காமல்
    மனிதனை இருக்கசொல்!
    மாமனிதனே அழகாய்ச் சொல்லி விட்டீர்...!
    கடவுள் இருந்தால்...
    அவரை முதலில் பார்த்துக் கொள்ளட்டும்...!

    -நன்றி.




    ReplyDelete
  9. மனிதனாக இருக்க
    மனிதாபிமானம் மதிக்கசொல். இது மட்டும் இருந்தால் போதும், எல்லாம் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  10. நல்லவனாய் இருப்பவன்
    நாளும் மனதால்இறக்கிறான் என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்