தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டில்.......3

பருவம் பதினெட்டில்.................
------------------------------------------



பாதியில் விட்டப் படிப்பை
பட்டமேல் படிப்பில் சேர்ந்து
போதிக்கும் கல்வி வேண்டி
பொழுது சாய்ந்த நேரத்தில்

மீதியும் படித்து முடிக்க
மீசைதாடி துறக்க மறுத்து
வீதிக்கும் வீட்டுக்கும் அலைந்து
விதியென கருத்தாய் படித்தார்

வயதில் நண்பரோ மூத்தவன்
வாலிபம் முழுதாய் துறந்தவன்
இதயத்தில் காதல் இன்னமும்
இருப்பதை சொல்ல மறுப்பவன்

படிப்பில் ஆர்வம் இருந்ததால்
படிக்க மீண்டும் தொடர்ந்தார்
அடிக்கடி மனதில் ஏதோ
ஆசையும் கூடவே சேர்ந்தது .......


....................(கவியாழி)................


Comments

  1. ஆக ஆர்வத்தைப் பொறுத்து...!

    ReplyDelete
    Replies
    1. வருக தொடர்க.....ஆர்வம் வரும்

      Delete
  2. தங்களின் பதிவு கண்டு நீண்ட நாட்களாகிவிட்டதே
    மகிழ்ச்சி
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே.இனிமேல் தொடரத்தான் விருப்பம்.நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்