தெய்வங்கள்

தெய்வங்கள்

பகிர்ந்திட உடனே நினைக்கும்.....

மேனகை அவளின் முகமோ
மிதமான புன்னகை தெரியும்
தேனடை நிறத்தில் தெளிவாய்
தேகமோ மெலிதாய் இருக்கும்

பார்த்திட மனது துடிக்கும்
பகிர்ந்திட உடனே நினைக்கும்
பூத்திட்ட பூவாய் இருந்தும்
புயலென மனதில் உதிக்கும்

வேர்த்திடும் இடங்களில் மிச்சம்
வேதனை மட்டுமே மிஞ்சும்
நேர்ந்திடும் பொழுதினில் மனதில்
நிறைந்திட வறுமை கொஞ்சும்

பூத்திடும் மலரின் வாசமாய்
புதிதாய் தொடங்கி யடங்கும்
புதிராய் நிகழும் பெண்மை
புரிய மறுக்கும் ஏழ்மையால்..........


தொடரும்.......
பருவம் பதினெட்டில்......6

.


.......(கவியாழி).......

Comments

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்