தெய்வங்கள்

தெய்வங்கள்

இடையில் ஏதோ மனதில்.....


வயதில் மூத்தவன் னானாலும்
வாலிபம் மறந்து போனாலும்
நினைவில் ஒதுங்கி நின்றாலும்
நிழலோ படிப்பைத் தேடி

துணையாய் யாரும் இல்லை
தூரத்து வயதில் தொல்லை
தனியாய் தினமும் வந்தே
தனிமைப் பிரிவை உணர்ந்தான்

இனிய பொழுதை தினமும்
இடரே யின்றி படிப்பில்
தொடராய் படித்து மகிழ்ந்து
தொடந்தான் படிப்பை உணர்ந்து

இடையில் ஏதோ மனதில்
இருட்டாய் இருந்த இடத்தில
குடையுள் விளக்கை பிடித்து
குமரியும் எதிரே தெரிந்தாள்  ....

பருவம் பதினெட்டில்................7


...........(கவியாழி)......................

Comments

  1. வணக்கம்
    ஐயா
    இளமைக்காலங்கள் கோலம் போடுகிறது அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்