தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்றும் வாழும் பாரதியே....


இன்றும் வாழும் பாரதியே
எப்படி மறப்பேன் உனையே !
எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று
எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்!
உன்னை விட்டு வைத்தால்
உலகையே மாற்று வாயென,
பெண்மை யொத்த சிலரால்-மனதால்
பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய்
கண்ணைபோல் வளர்த்த மகளை
கலப்புத் திருமணம் செய்து
கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி
கண்குளிர பார்க்க எண்ணியதை,
திண்ணைத் தோறும் சென்று
தீராப்பழி சுமத்தி வந்தோர்
பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி
திருமணம் செய்து வைத்தார்
கண்ணை இழந்துக் கலங்கிக்
கடின வாழ்க்கை வாழ்ந்தும்
காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால்
கண்துயில வைத்து விட்டனரே!
(கவியாழி) 

Comments

  1. வணக்கம்
    ஐயா

    பாரதியை பாரில் புகன்ட வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
  2. மனதில் உறுதி வேண்டும்...!

    ReplyDelete
  3. அருமை ஐயா
    பாரதி என்றும் வாழ்வார்

    ReplyDelete
  4. ஐயா பாரதியின் வாழ்க்கை நிகழ்வை இவ்வளவு நேர்த்தியாக பகிர்ந்து விட்டீர்களே. சிறப்பான வரிகள் ஐயா.

    ReplyDelete
  5. சிறப்புக் கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சிறப்பான வரிகல் நண்பரே!

    ReplyDelete
  7. பாரதியோடு தமிழும் வாழும்

    ReplyDelete
  8. பாரதி கவிதை அருமை.

    ReplyDelete
  9. பாரதியை சிறப்பிக்கும் கவிதை அருமை! நன்றி!

    ReplyDelete
  10. பாரதியின் கவிதை அருமை ஐயா வலைச்சரத்திஸ்....
    http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html?showComment=1418474635473#c4989795754924664076

    ReplyDelete
  11. பாரதிக்கு அருமையான புகழஞ்சலி.

    ReplyDelete
  12. நீண்டு செல்லும் பாரதியின் நினைவுகள்
    என்றும் நினைவை விட்டு நீங்கா!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்