தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டில்.......4

பணியில் இருந்தும் அவனோ
படிப்பில் கவனம் தொடர்ந்தும்
பிணியாய் மனதில் தொடரும்
பிள்ளைகள் மனமோ கொஞ்சம்

நிம்மதி இல்லை வீட்டில்
நித்தமும் சண்டை கூச்சல்
சொந்தமும் சுற்றமும் வருகை
சோதனை வேதனைத் தொடரும்

எதிலும் மனமோ ஒதுக்கும்
ஏளனம் தினமும் தொடரும்
முந்தைய நாட்களை நினைத்து
முழுவதும் கவலைகள் மறையும்

சிந்தனை செய்ததில் மனமோ
சிறந்தது படிப்பே என்றே
வந்ததை மறந்திட வழியாய்
வசந்தமோ ஐம்பத்து ரெண்டில்.........5
(கவியாழி)

Comments

  1. Replies
    1. ஓய்வு நேரத்தில் உதவி செய்ய

      Delete
  2. கடந்த வலைப்பதிவர் விழாவிற்கு வருகை தந்தபொழுது சந்தித்தது ...
    கவிதை அருமை ...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே அதுபோலத் தருணம் மீண்டு அமையாதா என ஏங்குகிறேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்