Posts

Showing posts with the label கவிதை/சமூகம் / வேதனை

தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிவேண்டாம் என்தாயே

பழிவாங்கும் செயலாலே பாவம் மட்டும் குறையுமா பாரம் அதிகமாய் மாறுமா பழியும் உன்னோடு சேருமா மொழியாலே சின்னக் கணைவீசி முறையின்றி சொன்ன வார்த்தை வினையாக  எனைக் தாக்குமா விதிமாறி உன்னை வெல்லுமா வயதான காலத்தில் வேண்டுமா வாழ்த்துகிற நிலையும் மீறுமா தடையான காரணம் என்ன தயை கூர்ந்து சொல்வாயா விதியோடு விளையாடும்  நீ வீணான மதிகொள்ளக் காரணம் விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா விடுத்தவர் கல்வியின் கொள்கையா இனிவேண்டாம் என்தாயே இப்போதே இதை நிறுத்திவிடு இளவலைநீ  அன்பாலே வாழவிடு இனிமையை இனியேனும்  காணவிடு மதிகெட்டேன் மனையை விட்டேன் மருத்துவம் விரும்பியே இழந்தேன் இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை இனியாவது விதியை மாற்றிவிடு

பணம்....பணம்...பணம்..

மக்கள் பலபேர் மடிவதற்கும் மனதை வருத்திக் கொல்வதற்கும் நிச்சயக் காரணம் பணமாமே நித்தமும் கெடுப்பது இதுதானே மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு மனமே வருத்தி மாய்வதற்கு மனிதம் தெரியாப் பணமாமே மனிதனின் குணமும் கெடுதாமே நாளும் நாளிதழ் பார்க்கின்றோம் நல்லச் செய்திகள் இருந்தாலும் வாழும் முறையில் மாற்றத்தால் வருத்தித் தினமும் அழுகின்றோம் தினமும் நாமே காண்கிறோம் தெரிந்தும் மௌனம் காக்கிறோம் குணமே இல்லாப் பணத்தாலே குடும்பமே தற்கொலை செய்கிறதே அவசர உலகில் அனைவருமே அடிமை வாழ்வு வாழ்வதற்கும் அக்கம் பக்கம் நடப்பதற்கும் அடைக்கலம் கொடுப்பது பணமாமே

மலையில் சிவனைக் கண்டிடவே....

Image
                          (நன்றி-கூகிள்) மலையில் சிவனைக் கண்டிடவே மனதில் அமைதிக் கிடைத்திடவே துணையும் உறவும் மகிழ்ந்திடதே தூரப் பயணம் செய்தனரே காட்டில் மரங்களை வெட்டியதால் கட்டடம் பலதும் கட்டியதால் ஏட்டில் சொல்ல இயலாத எண்ணில் அடங்கா உயிரிழப்பை இத்தனை உயிர்கள் மடிந்ததை இப்படி நடந்தது எச்செயலால் கற்பனை கெட்டா உயிரிழப்பு கண்டதும் மனது கொதிக்கிறதே ஊருக்கும் உறவுக்கும் தெரியாது உயிரைத் துறந்த நல்லோர்கள் உடலைக் கூட காணாத உண்மை நிலையை அறிவீரா மக்கள் மனதைக் காயமாக்கும் மடமையான இச்செயலால் மனதும் இப்போ வலிக்கின்றதே மழையோ அதையே சொல்கிறதே இயற்கை வளங்களை காத்திடுவோம் இனியே அதனை போற்றிடுவோம் செயற்க்கையாலே வரும் துயரை சீக்கிரம் தடுத்து முறியடிப்போம் மரங்கள் அருகில் வளர்த்திடுவோம் மலைவளம் நன்றே காத்திடுவோம் இயற்கை செய்யும் பேரிழப்பை இனிமேலாவது தடுத்திடுவோம்

தீண்டத் தகாத மனிதன் யார்

பிணத்தை தின்பவனா இல்லை பெண்மையை அறியாத மனிதனா தினத்தை யறியாத பிறவியா தீண்டத் தகாத மனிதனா உழைப்பே இல்லாமல் ஒதுங்கியே உழைப்பவன் பணத்தை சுரண்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவனும் பாவத் தொழில் செய்யுபவனும் அடுத்தவன் பிழைப்பை கெடுத்து ஆயுளும் பணம் சேர்க்கும் அற்பப் புத்திக்காரன் அறிந்தே அன்றாடம் காய்ச்சியிடம் சுரண்டுபவன் பதுக்கலை பலவாறு செய்யும் தலுக்கு மேனியை வைத்து தகாத தொழில் செய்யும் இழுக்குப் பிழைப்பை செய்பவன் பிச்சைக் காரனிடமும் பிடுங்கும் எச்சில் பொறுக்கி கயவன் எந்த நிலையிலும் சாதி(தீ)யை எங்கும் சாதியை வளர்ப்பவன் பொய்யே பேசிப் பிறரையும் நம்ப வைக்கும் பூசாரி பாவம் தீர்க்க வருவோரிடம் பணம் கறக்கும் பொய்யாளன் வாழ்கையே வெற்றி டமாய் வாழ முடியாதோ ரிடமும் குழப்பிக் கூலி கேட்கும் கொடியோன் கொள்கை உடையோன் இவ்வாறான இழிநிலை கொண்டவனே அவ்வறுப்பேசி அடுத்தவனை பழிப்பான் அவனைக் கண்டு அஞ்சாமல் அவ்விடமே அடையாளம் காண்பீர்

பொறாமை என்பதே வேண்டாமே

அவனா இப்படி மாறினான் அதையும் எப்படி நம்பினான் குணமே போற்றும் நல்லவன்-குறுகிக் குறைத்தப் பண்பே பொறாமையா ஆண்டுகள் பலநாள் பழகியதை அன்பாய் இருந்து மகிழ்ந்ததை தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம் தவறாய் நினைப்பது இதுவன்றோ கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும் கொள்கை மாறிப் போனவரும் தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே தானே வந்தது பொறாமையே அண்ணன் தம்பி உறவுகளும் அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும் எண்ணம் அதையே மாற்றியே-உறவில் ஏற்றத் தாழ்வை வளர்திடுமே தாத்தாப் பாட்டி உறவுகளை தள்ளி வைக்கும் நிலைமைக்கும் உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை எள்ளி நகைக்கும் நிலையாகும் பணியில் சிறந்தோர் பரிதவிக்க பாடாய் படுத்தும் இச்செயலால் தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு தூய்மை மனதையும் நசித்திடுவர் எளிதில் யாரையும் வசப்படுத்தும் எல்லா வயதினர் துணையாகும் பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி பொறாமை என்பதே வேண்டாமே

உறவு மின்று செத்துடிச்சு

மழையப் பார்த்து ஏங்கிடுச்சு கண்ணி ரண்டும் பூத்திடுச்சி மேக மெல்லாம் ஓடிப்போச்சு மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி குளமெல்லாம் வத்திப் போச்சு கொக்கு நாரை அதிகமாச்சி வயலெல்லாம் காஞ்சி போச்சு ஆடு மாடு மேஞ்சிடுச்சி நில மெல்லாம் மனைகளாச்சு நிறைய வீடு வந்திடுச்சி நில மற்று போனதாலே உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி மனதெல்லாம் மாறிபோச்சு மனிதநேயம் குறைஞ்சிடுச்சி பணத்துக்காக அடகு வச்சு கனத்த வட்டி வளர்ந்துடிச்சி இனத்துச் சண்டை வந்துடிச்சு இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி தேச நலன் குறைஞ்சிடுச்சி தேவை மட்டும் மாறிடுச்சு உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி உண்மையன்பு தேய்ந்சுபோச்சு உருப்படியாய் சேர்ந்து வாழும் உறவு மின்று செத்துடிச்சு

தினமும் பலபேர் மடிவதற்கு......

தினமும் பலபேர் மடிவதற்கு பணமும் பகையும் காரணமா குணமே இல்லா கோழையர்கள் கொடுக்கும் தொல்லையின் வேதனையா மனதும் வருந்த வேண்டுமா மனிதமும் மறக்கத் தோனுமா மக்கள் பலபேர் மடிவதினால் மனிதனின் துயரேத் தீர்திடுமா மனிதம் மறந்து போவோரே மக்கள் கவலை மறந்தோரே பணமே குறியாய் வாழ்வோரே பணத்தை உணவாய் உண்பீரோ மதமும் எங்கும் சொல்வதில்லை மனதில் கவலை வளர்ப்பதற்கு மக்களின் குறையை நீக்கிடவே மாற்று வழிதான் இருக்கிறதே கவலை மனதில் மறைவதற்கு கணிதம் சொல்லும் விடையென்ன அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும் அதற்கும் தீர்வு இருக்கிறதோ தற்கொலை செய்யும் இழிந்தோரே நற்செயல் இதுவென யாருரைத்தார் தற்கொலை தண்டனை யாருக்கு நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு

தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்

எட்டுமாத கர்பிணிபோல் எப்போதும் முந்தி நிற்கும் கட்டுடம்பு மாறியே காட்சிதரும் காற்றடைத்த வயிற்றினாலே குனிந்து நின்று பாராது கூணுடம்பு உள்ளோர்க்கு ஏனிந்த வேதனை-எல்லாமே உணவால் வந்த சோதனை இளையோருமின்று இப்படித்தான் எழில் துறந்து காணுகிறார் தொழிலாகப் பலபேர்-அதை துணையாக கொண்டுள்ளார் எத்துணைப் பயிற்சிகள் எப்போதும் செய்தாலும் அழகைக் கெடுக்க -விரைந்து ஆர்வமாய் முந்துகிறாய் தொந்திகணபதியை துதித்து தேங்காய் உடைக்கிறார்கள் தேடிபோய் சிரித்து நின்றால்-என் தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் அடுத்தவர் பார்த்தாலும் அதைப்பற்றிக் கவலையின்றி கொடுக்கின்ற சத்ததால்- உன்னை அசிங்கமாய் பார்க்கிறார்கள்

ரசித்தவர்கள்