மானம்கெட்ட மடையனே!
தடைகளே தடங்களாய் இருந்திட நினைத்தேன் ! தறிகெட்ட மதியோரையும் மதித்தேன் சிரித்தேன் ! உடை மட்டும் வெள்ளையாய் உடுத்தி உள்ளத்தை இருளாக கண்டேன் ! கயவனே கள்ளனே கண்ணிழந்த குருடனே காட்சி அறிவாயா ? கண்திறந்து பார்ப்பாயா ? நேற்றுவரை வரை என்செய்தாய் ! நிலைமை மறந்து நிம்மதி கெடுத்து , பிழை நீ செய்வதை பேதை உலகம் அறியும் ! பின்னால் நீ புரிவாய் ! நிலை கெட்டவனே .... நெஞ்சில்லாதவனே ... வஞ்சனை கொண்டேனே ..... வாளும் வாழ்க்கை தேவையா ? பிளையோனே பித்தனே , இனியேனும் திருந்திடு என்னை நீ புரிந்திடு கலைத்திட்ட என் கனவை நீ மறந்திடு காலமும் நிம்மதி பெறுவாய் இனிமேலும் வதைக்காதே ! இனி என்னை நினைக்காதே ! நிம்மதி இழக்காதே ! புத்தியிழந்து சிரிக்காதே ! உழைப்பும் உண்மையும் ஒருநாள் பேசும் உரெல்லாம் உணர்ந்து உன்னை ஏசும் மறக்காதே மதியிழந்து தொலைக்காதே!!!