தாய்மை
தாலி கட்டியதும் தவம் ஆரம்பம்
தனியறையில் நாளும்
ஏற்படும் பூகம்பம்
தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை
தாகமது மட்டும் தணியும் முடியும்!
கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை
கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல்
சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில்
சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்!
அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி
அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள்
வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை
பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்!
பிறக்குமுன்னே பிள்ளை
செய்யும் சேட்டையை
பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள்
பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே
இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...