தெய்வங்கள்

தெய்வங்கள்

சிந்தை யது மங்கும்.....

சிந்தை யது மங்கும்
சித்தம் மழுங்கி நடுங்கும்
வித்தை செய்யும் மனதால்
விடியும் வரை கலங்கும்

சொந்தமும் தள்ளி வெறுக்கும்
சொல்லைக் கேட்க மறுக்கும்
சந்தங் களின் றின்றி
சரீரம் அதிரக் கத்தும்

வேந்தன் முதல் வீரன்
வேட்கை யுள்ள யாரும்
விரும்பி அருகில் வந்தால்
வெட்டித் தலை சாய்க்கும்

எங்கும் இருள் பரவி
இருட்டாய் மனதுள் இருக்கும்
அருகில் வர பயந்தே
ஆட்டமாய் ஆடி ஒடுங்கும்

தூக்க மின்றித் தவித்தே
துயரம் கொள்ளும் மனிதன்
தீர்க்க வரும் நிகழ்வால்
துயரம் பறந்தே போகும்


(கவியாழி)

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. வித்தை செய்யும் மனதை அடக்க வேண்டும்...

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

    ReplyDelete
  5. மனதின் மாயா ஜாலங்களை கவிதையாக வடித்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. சில நேரங்களில் மனம் இப்படித்தானே செய்கிறது..
    அருமை ஐயா..

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்