Posts

Showing posts from January, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

இதுவும் வாழ்க்கையா?

திருடன்கூட தன்தொழிலை தெய்வமென போற்றிடுவான் அரசியல் வாதியும் அவனைப்போல் அலைந்தே திரிந்தே செய்திடுவான் பதுக்கல்காரன் பதுக்கியதை பழகிப்போன தொழிலென்பான் கல்வியை விற்கும் மோசடியும் கடவுள் சேவை தொழிலென்பான் லஞ்சம் கேட்போன் லட்சியமாய் கொஞ்சம்தானே கொடு என்பான் வஞ்சகம் செய்வோன் வருத்தமின்றி வாழ்க்கை பிழைப்பு இதுவென்பான் தினமும் காலை எழுந்தவுடன் திரிந்து அலைந்தே செய்திடுவான் பொருத்தமான தொழிலென்றே புதிதாய் தொழிலை தேட மாட்டான் சீ......இதுவும் வாழ்க்கையா?

மதமின்றி மனிதனாக முடியுமா?

http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post.html

ஆம் ! தமிழா .......

வாய்மூடி மௌனியாக வாழத்தான் வேண்டும் வந்தோரோயும் சொந்தமாக வாழ்த்தத்தான் வேண்டும் கூன் குருடு செவிடு போல இருக்கத்தான் வேண்டும் கூடிவாழ்வதில் ஒற்றுமை கொண்டுத்தான் ஆக வேண்டும் தொழில் முடங்கி தொடரத்தான் வேண்டும் தொல்லைகளைத் தாங்கியும் சிரிக்கத்தான் வேண்டும் வந்தோரை வாழச் சொல்லி வழியின்றி தவிக்க வேண்டும் வாழ்நாளை  சுருக்கி வயிரும் காயத்தான் வேண்டும் சன நாயகம் என்றும் சகித்துக்கொள்ள வேண்டும் சமதர்ம சமுதாயம் போற்றத்தான் வேண்டும் சாதியும் வேண்டும் சமத்துவமும் வேண்டும் மீதியும் கேட்டு மிதிபட்டு முரண்பட்டும் வாழ வேண்டும் உண்ண உணவில்லை உள்ளூரில் சங்கம் வேண்டும் சாத்திரம் பேசி சகோதர சண்டையும் வேண்டும் இருந்தாலும் எல்லாமே சகித்துவாழ வேண்டும் எப்போதும் தமிழுக்காக ஏழ்மையோடும் வாழ வேண்டும் ஆம் .. தமிழா ! வாழ்ந்துதான் ஆக வேண்டும்

இதழ் வேண்டும் எனக்கு..........

இதழ் வேண்டும் எனக்கு இதழ் வேண்டும் இமைமூடிப் பருக இதழ் வேண்டும் இணையாகும் முன்னே இதழ் வேண்டும் இறுக்கி அணைத்தபடி இதழ் வேண்டும் நுனி நாக்கில் சுவைக்க இதழ் வேண்டும் நெடுநேரம் முடியாத இதழ் வேண்டும் முடியாத நேரமாய் இதழ் வேண்டும் முப்பொழுதும் உணவாக இதழ் வேண்டும் எப்போதும் சுவையாக இதழ் வேண்டும் எழுச்சிப் பெரும் முன்னே இதழ் வேண்டும் இனிக்கின்ற  கனியாக இதழ் வேண்டும் கட்டுடலை சூடாக்க இதழ் வேண்டும் கனிந்தவுடன் முழுவதுமாய் கடைசிவரை எனக்கு  அது ? வேண்டும்.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

மேலே கண்ட பழமொழி எல்லாத  தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்று. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  ஒரு சில நாட்களில்  இப்படி எண்ணி வருந்துவதுண்டு.இது நமது கலாச்சாரம் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும் நிகழ்வும் உண்மையும் கூட. சிறிய வயதில் பள்ளி செல்லும்போது பார்த்து பத்திரமாய் திரும்பி வா சாலையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து  வா என்றும். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டயா ? பள்ளியில் என்ன பாடம் நடத்தினார்கள்  என்றும் அக்கறையோடு விசாரிப்பார்கள் அப்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சொல்லுவார்கள். அதே பிள்ளை கல்லூரிக்கு போகும்போது  நீங்க பத்திரமாய் அலுவலகம் சென்று வாருங்கள் சரியா சாப்பிடுங்கள்என்றும் நான் வீடு திரும்பி  வரும்போது  உங்களுக்கு  ஏதாவது வாங்கி வரட்டுமா என்பது போன்ற  அக்கறையும் அன்பில் முதிர்ச்சியும் தெரியும்.பண்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்காலம் பற்றிய யோசனையையும் கேட்பார்கள்.. வேலைக்கு செல்லும்போது அன்பிற்கு குறைவிருக்காது ,நாம் சாப்பிட விரும்பும்,  விரும்பாததையும் வாங்கி வந்து  நம்மோடு பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.சரியாக  ஊதி

"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா

Image
"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தக வெளியீட்டு விழா  படங்கள் திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன் திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு  வழங்கப்படுகிறது  திரு.திருமாவளவன்  அவர்களால் "அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தகம் வெளியிடப்பட்டு  புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார். இவ்விழாவிற்கு   குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, கவியாழி.கண்ணதாசன்

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய் சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள் சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள் தெருவோரம் நின்று தினமும்  ரசித்து தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும் மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம் அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள் இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான கிழமை தோறும விரதமும் இருந்தார்கள் இத்தனையும் செய்தும் இழி மனதில் பித்தனாய் மாறி  பிறள் புத்தியால் தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால் புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்

யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று    உடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்    கனவாக தெரிந்திடும்! மெய்யும்    பொய்யும் மேனியு    ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்    செயலும்    சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்    மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே! நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்    வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை துஷ்ட மெல்லாம் தூரசென்று    விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவா

புத்தக வெளியீடு விழா அழைப்பிதழ்

Image
     அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் நான் எழுதிய  மேற்கண்டப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நாளை 13.01.2013 மாலை 4.00 அளவில்  நந்தனம் YMCA  கல்வி வளாகத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தாரினால் வெளியிடப்பட உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் அனைவரும்  வருக ஆதரவு தருக. கவியாழி கண்ணதாசன் சென்னை கைப்பேசி எண்:9600166699

இனிய குழந்தைக்கு.........

Image
  இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால் இனிமையான பிள்ளைப்பேறு இனிதே க்  கிடைத்திட துணையோடு தோள் சேர்த்து துள்ளலுடன் - விளையாடி கனியாக அம்பெய்து கணக்காக இணைந்து விந்துள்ளே சென்றதும் வீரனாய்த் தேடி சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி திங்களாய் சேர்ந்தத் திரவியத்தை – முத்தாக ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைக்கும் அன்று முதல் குடத்துள்   கருவாக்கி அய்ந்தாவது வாரத்தில் அழகாக உருவாகி பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளரும் கொஞ்சும் குரலையும்க் குடும்ப உறவையும் மஞ்சதுள்ளேயே மனதுள் இருத்தியும் கேட்க பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே  

மனச்சிதைவு ஏன்? விடுபட முடியுமா?

      மனச்சிதைவு எதனால் வருகிறது ? யாரால் வருகிறது ? எப்படி போக்க முடியும் ? இது ஒரு புரியாத புதிர் . பலரும் இம்மாதிரியான விஷயங்களில்  சீக்கிரம்  குழம்பி விடுகிறார்கள் அதனால் தங்களின் வாழ்வே பறிபோய்விட்டதாக எண்ணுகிறார்கள் இனிமேல் முடியாது என்னால் முடியாது எப்படி முடியும் என்பதுபோன்ற கேள்வியை தாங்களாகவே நினைத்து தவறான முடிவெடுத்து விடுகிறார்கள்        இது தவறான நிகழ்ச்சியுமல்ல  இயல்பாக எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு .அதை அவர்கள் அணுகும் முறையில்தான்  மாற்றம் வேண்டும்..ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குணமுண்டு எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை  சிரிப்பதில்லை  உறங்குவதில்லை இது எல்லாமே மனம் சார்ந்த விஷயம்.இது தான் நம்மை நாமே வேறுபடுத்தி பார்ப்பதால் ஏற்படும் நிகழ்வு.முடிவு தருணம்.            அணுகுமுறையை மாற்றிகொண்டாலே அத்தனையும் சரியாகிவிடும் பசி தூக்கம் ஏக்கம்போல  அத்தனையும் நடைமுறை நிகழ்வுகளே அதை எல்லோரும் எப்போதும் எல்லோருக்கும் ஏற்படும் நிகழ்வு என்றே எண்ண வேண்டும் .அப்படி மனதில் எண்ண தவறுவதால் ஏற்படும் மன மாற்றமே  மனசிதைவு என்று நான் நம்புகிறேன்.         பெரும்பாலும் மற்றவரைப்

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே !

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே ! இதற்காகவா பிறந்தாய் இவ்வளவுநாள் வளர்ந்தாய் ! உனக்காக வாழ்ந்திடு  உணர்ச்சியை பகிந்திடு ! ஒரு  வருடஇன்பம் ஒருவருக்கும் திருப்தி இல்லை கணக்காக நடந்தால் கண்ணியத்தில் குறையுமில்லை பிறரருக்காக பார்க்காதே பிறருக்காக வாழாதே! இளைமை  என்பது இன்றைய நாள்தான் இனிமை என்பது இளமைக்கும்  தேன்தான் இன்றைய வாழ்வை இனிமையாக்க  முயற்சி செய் ! இப்போதும் தப்பில்லை இனிசொல்ல வழியில்லை மாண்டு  போனவனுக்காக மீண்டும் தப்பு செய்யாதே ! கோழைக்காக நீயும் கேள்விக்குறியாய்  இருந்திடாதே ! நீ தான்  நீதிபதி நின் வாழ்க்கைக்கு அதிபதி மறுமணம் தப்பில்லை மறுவாழ்வு கசப்பதில்லை உருவாக்கு   புதுயுகம் உனைபோற்றும் இந்த உலகம் துணிந்திடு செயல்பாடு துயரத்தை வென்றிடு !!!

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய் சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள் சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள் தெருவோரம் நின்று தினமும்  ரசித்து தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும் மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம் அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள் இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான கிழமை தோறும விரதமும் இருந்தார்கள் இத்தனையும் செய்தும் இழி மனதில் பித்தனாய் மாறி  பிறள் புத்தியால் தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால் புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்

இணைந்து வா இறுதி காலத்திலாவது

அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய் அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம் துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில் தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே நடை பயில திறன் மறந்து நடப்பதற்கு துணை யழைத்து வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில் கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும் பஞ்சமில்லை பணம் பொருளுக்கும் எஞ்சி நின்ற சொத்து மிழந்தும் தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு மஞ்சமென நான் கிடந்து  மடிவேன் எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும் பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும் பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ? ஏழுலகம் போற்றி என்ன பலன் ? படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும் கிடைக்காதோ நாளை இந்த நிலை சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா? பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ் எந்தம் பண்பென விரைந்து வா அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில் அழகு தமிழின் நல்ல கருத்துக்களை உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு இணைந்து  வா இறுதி காலத்திலாவது

பேரழகி வட்ட நிலவு

Image
 பேரழகி வட்ட நிலவு ஊரெல்லாம் காணாது  உன்னை நான் மறைத்திருக்க உள்விளக்கு எரியாமல் உன்னோடு சேர்ந்திருக்க பாரெங்கும் சுத்திவரும் பேரழகி வட்டநிலவும் பார்த்து விட்டு போகாமல் பைந்தமிழ்லாய் பார்பதேனோ நீ  விடும் முச்சு நிம்மதியை கெடுபதாலோ நிலவுக்கே போட்டியாக நின்னலகை கண்டதாலோ மான் கூட்டமெல்லாம் மறுபடியும் பார்க்கவேண்டி மயிலிறகு தோகையுடன் மறைந்திருந்து காண்பதேனோ மலர்படுக்கை மஞ்சத்தில் பஞ்சனையும் மெதுவாக கொஞ்சனைக்க  வேண்டியே கெஞ்சுதடி வஞ்சியே வீண் பேச்சு பேசாமல் விடியும்வரை உறங்காமல் நானுன்னை பருகிடுவேன் நல்லிரவு விடியும்வரை ஊர்பார்த்து வந்தவுடன் உள்ளவர்கள் ஆசியுடன் பார்போற்ற உன் கை பற்றிடுவேன்  நங்கையே

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்          தர்மம் பண்றேன் பேர்வழி என்று தனது தேவைக்கில்லாமல்  அடுத்தவருக்கு கொடுப்பது  என்பது ஏமாளித்தனம் என்று நான் சொல்லுவேன்.முதலில் தனது தேவைகளும்,தனது குடும்பத்தினர் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்துவிட்டு அதன்பின் அடுத்தவரை பற்றி யோசிப்பதுதான் உண்மையும் சிறந்ததுமாகும்.அதற்காக கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை .         முதலில் தனக்கு தேவையானதை அதாவது தன் குடுபத்திற்கும் சாப்பாட்டு செலவு,பிள்ளைகளின் கல்விக்கான செலவு வீட்டு வாடகை, மற்றும் பிற தேவையான அத்தியாவசியமான செலவுகள் போக சேமிப்பும் முதலீடுட்டுக்கும் ஒதுக்கியது போக செய்வதுதான் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலிதனமென சொல்லுவேன்.         தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன்பின்  தானம் செய்யும் நிலையை இழப்பான் பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான்  அப்படி பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சும் அதனால் வேதனையும் மன உளைச்சலுமே இருக்கும்       அதற்குப்பின் அவனே ஏன் செய்தோம் என்ற நிலையில் என்னிடம் இருக்கும்போது எவ்வளோவோ யார் யாருக்கோ கொடுத்தேன் இன்று எ

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more