மழைப்பூச்சி மழை வரும் திசையை மகிழ்வுடனே சொல்லும் மடியும்முன்னே! மறுபடியும் காண மழைக்காலம் தான் காண வேண்டும்!! துணைக்காலமும் குறைந்து ஓடி இளைத்துளிரில் மறைந்துகொள்ளும் உன்னைப்போல் என்னுள் தங்கி விடும் !!! தட்டான் பூச்சி ஓடி ஓடி களைத்தாலும் உடனடியே சிக்காது ஒளிந்திருந்து பார்த்தாலும் உவப்புடனே பறந்துவிடும் தேடிப்பிடிததும் துவண்டுவிடும் உன்னைப்போல!!! நீர்த்தேரை குதித்து வரும் கொண்டாடி மகிழும் பிடிக்கப்போனால் பாய்ந்து ஓடும் கடிக்காது கண்ணால் பயம் காட்டும் உன் , கண்ணைப்போல!!!