தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால்
கஷ்டமும் தருவானா?

கயவர்கள் நிம்மதியாய்
காசு பார்க்க விடுவானா?

திருடன்  துரோகிஎல்லாம்
தைரியாமாய் திரிவானா?

காசு பணத்திற்காக
கள்ள தொழில் செய்வானா?

இல்லாதவன் ஏங்குகிறான்
இருப்பவனோ  பதுக்குகிறான்

உள்ளதை சொல்பவன்
உயர்வின்றி தவிக்கிறான்

நல்லவனாய் இருப்பவன்
நாளும்  மனதால்இறக்கிறான்

பொல்லாங்கு சொல்பவன்
புகழோடு இருக்கிறான்

உனக்காக செய்வதை
ஏழைக்கு கொடுக்கசொல்!

உயர்வாக உன்னிடம்
ஒழுக்கத்தை பயிலசொல்!

தனக்காக உள்ளதுபோக
தருமம் செய்யச்சொல்!

மனித நேயம்  மறக்காமல்
மனிதனை இருக்கசொல்!


மனிதனாக இருக்க
மனிதாபிமானம் மதிக்கசொல்!

பெற்றோரை,மற்றோரை
மாண்புடனே மதிக்கசொல்!

தனியோளுக்கம் கற்றுதந்த
ஆசிரியரை மதிக்கசொல்!!!

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more