Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இப்படியும் என்னை வாழ்த்தியோர்

அன்புள்ள நட்புகளுக்கு அடியேனின் வணக்கம் கடந்த 24.04.2013 அன்று நான் எழுதிய 'நான் புலமை அறிந்தப் புலவனில்லை" என்ற கவிதைப் பற்றி கருத்து கூறியவர்களில் பலர் என்னை கவிஞரே ,பாவலரே,புலவரே என்றும் அருமையாக எழுதுவதாகவும்,தொடருங்கள் என்றும் எல்லா இலக்கணமும் உள்ளடங்கியுள்ளது என்றும் எழுத்துப் பிழை உள்ளதென்றும் முயற்சி தொடரட்டும் என்றும் வாழ்த்தியவர்கள் வணங்கியவர்கள் பலபேர் இருந்தாலும் கருத்தே கூறாமல் இருந்த நல்ல உள்ளங்கள், இனிய நண்பர்கள் நான் பெரிதும் மதிக்கும் நல்லோர்க்கும் எனது பணிவான வேண்டுகோள்" தொடர்ந்து படியுங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கரம்கூப்பி வேண்டிக்கொள்கிறேன். மேலும் இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன். மேலும் தளத்துக்கு பெயர் வேண்டும் என்ற காரணத்தினாலேயே கவியாழி என்று பெயர் வைத்து எழுதி வந்தேன். இந்தப் பெயர் வைக்க காரணம் கவிதையை ரசிக்கும் யாழின் இசை  ரசிகன் என்ற வரியின் சுருக்கமே "கவியாழி".கண்ணதாசன் என்ற இயற்பெயர் இருந்தாலும் அந்த மாபெரும் கவிஞரின் பெயரை எவ்விதத்திலும் களங்கப் படுத்தாமல் தவிர்த்து நான் புனைபெயரில் இ

கரும்பலகையைக் காணவில்லை

Image
                                                                           கரும்பலகை(சிலேட்) இன்னும் தவிர்க்க முடியாதது கரும்பலகை.இப்போதும் பலரும் தங்களின் குழந்தைகளுக்கு முதலில் எழுத்தக் கற்றுக் கொடுப்பது இது போன்ற கரும்பலகையில்தான். கணினியின் பயன்பாடு  எல்லோர் வீட்டிலும்  உபயோகத்தில் இருந்தாலும்  முதன் முதலில் எழுதக் கற்றுகொடுக்கும் சிலேட் எண்ணும் கரும்பலகையில்தான்  சொல்லித்தரும் வழக்கம் உள்ளது நானும் இதுபோன்றதில் தான் எழுதிப் பழகினேன் .எனது அப்பா அப்போது என் கைபிடித்து சரியாக எழுதுவதுப் பற்றிச் சொல்லித்தந்தார்.அதன்பின்பே பள்ளியில் சேர்ந்து எழுதப் பழகிக் கொண்டேன்     எழுதிவிட்டு அழிப்பதற்கு சிறு துணியையோ கையாலோ அழித்த ஞாபகம் இன்னும்நினைவில் இருக்கிறது.மேலும் அப்போதே என்வயதிலிருந்த மாணவர்கள் தண்ணீர் தழை,கோவை இலை போன்றவற்றைக் கொண்டு அழித்தால் எழுத்துக்கள் மிக துல்லியமாகவும் எழுதும்போது விரைவாகவும் எழுத முடியும் என்பதால் அப்போதே அதை காசுக்கு விற்றுவருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறான இலைத்தழைகளைப் நகரத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது

நல்லவங்க சேரும் கூட்டம்.....01.09.2013

வில்லு வண்டி பூட்டிகிட்டு வீதிவழிப் போற மச்சான் சொல்லுறத கேளுங்களேன் சித்த நேரம் நில்லுங்களேன் நாலுஊரு தாண்டி நானும் நல்ல சேதி கேட்கப்போறேன் நின்னுகிறேன்  சொல்லுபுள்ள நேரம் பார்த்துப் போகணுமே பல்லு இல்லா கிழவனுமே பார்த்து என்னை சிரிக்கிறாங்க பத்திரமா போயி சீக்கிரம் பார்த்தசேதி சொல்லு மச்சான் மத்த ஊருபோல இல்ல மாமன் பெத்த செல்லக்கிளி சத்தியமா நானும் வந்து சங்கதிய சொல்லப் போறேன் நம்ம தமிழ் நாட்டுலத்தான் நடக்கப் போற கூட்டத்துக்கு நாலுஊருத் தள்ளி நீயும் நாலுசேதி கேட்டுவாயேன் உள்ளதையே சொல்லப் போனால் ஊருக்குப் போறவேலை  நல்லவங்க சேரும் கூட்டம் சென்னையிலே நடக்குதடி சீக்கிரமா போயிவந்து சீருகொண்டு வாங்க மச்சான் சேலையோட தாலியோட சீர்திருத்த மணம் பண்ணிக்கலாம்

திருவாளர்கள் ;ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன் அவர்களும்

Image
  ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன்  ஆகிய இருவரைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இருவரும் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருவருமே புதியவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை ஊக்கப் படுத்துவதில் இருவருக்கும் நிகர் எனக்குத் தெரியவில்லை . பெரும்பாலான தளத்தில் சென்று வாசித்து அதற்கு வாக்களிப்பதோடல்லாமல் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லி உற்சாகப் படுத்தும் நல்ல உள்ளம் படைத்தவர்கள். அதுமட்டுமல்ல  இருவரின் பதிவுகளும் எல்லோரும் விரும்பிப்படிக்கும் படி சிறப்பாகவும் சிந்திக்கும்படியும் இருக்கும்..ரமணி அய்யா எழுதும் தமிழுக்கு  நிகர் அவரேதான். ஒவ்வொருமுறையும் நான் ஏதாவது பிழை இருக்காதா  அவரிடம் சொல்லித் திருத்தி பேர் வாங்கலாமே என்று நினைத்தால் அதற்கு இன்றுவரை வாய்ப்பே இல்லை.அவ்வளவு சிறப்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுதுகிறார். இலக்கணம் பற்றி எனக்கு எளிமையாக விளக்கும்போது நான் அவர் அருகில் இருந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காத என ஏங்கி வருகிறேன்.அவரும் என்னை மதுரைக்கு வரச்சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்குத்தான் நே

ஆழாக்கு சாம்பல் மட்டுமே....

பணத்தை சேர்க்கும் பயனையும் பசியில் சேர்த்துப் பாருங்கள் பகிர்ந்தே உணவைப் போடுங்கள் பயனோர் மகிழ்வய் காணுங்கள் இந்தப் பிறவியில் வாழ்வதையே இனிமை யாக்கி  உணருங்கள் இறுதி நாட்களில் மகிழுங்கள் இன்பம் மனதில் சேருங்கள் மகிழ்வாய் வாழப் பழகுங்கள் மனதை போற்றி உணருங்கள் மக்கள் துயரைத் போக்கியே மானிடம் புகழ வாழுங்கள் இனிமேல் புதிதாய் விதிசெய்வீர் இனிமை பணத்தில் இல்லாமல் தலைமேல் பணத்தை சுமக்காமல் தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே ஆழாக்கு சாம்பல் மட்டுமே அறிந்தோர் கையில் கிடைக்குமே அதற்காய் பணமேன் சேர்க்கணும் அதையும் தவிர்த்தும் சாகனும்

கணினியைத் திறந்தால்............

Image
(நன்றி கூகிள்) விடியலைக் கண்டதும்          வேகமாய்த் தேடினேன் விளக்கைப் போட்டதும்         விசையை அழுத்தினேன் தனக்குள்ளே சிரித்து        தகவலாய் வந்தது கணக்குப் பார்க்க        கணினியைத் திறந்தால் கண்டவர் எண்ணிக்கை         காண்டேன் இருநூறு கொண்டேன் கவலை        குறைய வேண்டாமென தமிழ்மணம் சென்றேன்     தளத்தினைப் பார்த்தேன் அமிழ்தாய் வேண்டும்     அப்போதே கைஅமுக்கி இதழ்த் திறந்து       இனிய வாக்கிட்டேன் புனிதமாய் போற்ற          கணினிதான் எனக்கு இனிமையைத் தருது          இன்னலைமறக்குது மனதும் மகிழுது           மாலையிலும் தொடருது தொடந்து வரவே           தினமும் விரும்புது தூக்கம் என்னை           தவிக்கவும் விடுது அறியாத நிகழ்ச்சிதான்           ஆனாலும் மகிழ்ச்சிதான்

விலை பேச வேண்டாமே...

விழியோரம் கண்ணீர் விரலாலே தட்டி விட்டேன் விதியாக வந்த சொல்லை விதி மாற்ற முடியுமா கதை தோறும் காட்சியும் கண்டதாய் சொன்னபோது கதை மாறிப் போகுமா கதையென்றே மாறுமோ சினம்கொண்டச் செயலால் சிதைத்து விடும் மனதையே சீர்நோக்கிப் பார்த்தாலே சீக்கிரமே புரியாதோ விலைப் பேச வேண்டாமே விதி மாற்றக் கூடாதே மதியாலே மாறிவிடு மக்களையே வாழவிடு விலைபோயிப் பயனென்ன விடிந்ததுமே சேதிவரும் உலைவாயை மூடினாலும் ஊர்வாயும் மூடாதே கலையாக பார்த்தாலே கல்வியும் மகிழ்ந்திடுமே கடவுளாம் சரஸ்வதியும் கருணை வழி காட்டுமே

உடல் முழுதும் வியர்த்தாலும்.....

Image
   (நன்றி கூகிள்) பாய்ந்து வரும் காளையது பார்தவுடன் வியந்து விடும் பருவமான  உடல தனால் புகுந்து விளையாடி வரும் கருப்பு வெள்ளை நிறமாக காளையது துணிந்து நிற்கும் கன்னியரைக் கண்டுவிட்டால் கழுத்தை தூக்கி முட்டவரும் ஊர் முழுக்க நின்றாலும் உரியதையேத் தேடிவிடும் உள்ளமதைக் கொள்ளை யாக்கி உறவுக்காக் ஏங்கி நிற்கும் பரிதவிக்கும் நிலத்திலே  பக்குவமாய் விதை விதைக்கும்  பாத்தியிலே விதைத்து விட்டு பாதயதைத் தேடித் போகும் உருவமதைக் கண்டவுடன் உடல் முழுதும் வியர்த்தாலும் விதியதனை எழுதி விட்டு விரைவாகப் பதுங்கி விடும்

புலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் ஐரோப்பிய நாடுகளின் இன்பச் சுற்றுலா தகவல்கள்

Image
நமது புலவர்.ராமநுசம் அய்யா   வலையுலக நண்பர்களுக்கு வணக்கம், நமது பதிவுலகின் மூத்தப் பதிவர் திரு.ராமநுசம் அய்யா அவர்கள்.தமிழ்நாடு அரசுப்பணியில் மூத்தத் தமிழ் பேராசிரியராக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்தார். அவரின் தீவிர முயற்சியால் தமிழாசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்த் தகுதியும் பலருக்குப் பதவி உயர்வும் கிடக்கக் காரணமாய் இருந்தார், தமிழுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி தமிழாசிரியர்களின் மனதிலும் வாழ்விலும் மறக்கமுடியாத தொன்றாற்றி வந்தவர். இன்றளவும் தமிழ்மீது தீராக்காதலுடன்  முகப்புத்தகத்தில் தினமும் வலம் வரும் இளைங்கனாகவும் தொடந்து தமிழ்க் கவிதைகளை இலக்கணத்துடன்  எழுதியும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அய்யா அவர்கள்   தமிழ்ப் பதிவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாக பதிவர்த் திருவிழாவை சென்ற ஆண்டு நடத்தியதுடன் இந்த ஆண்டு 01.09.2013 ல் நடைபெற  உள்ள தமிழ்ப் பதிவர் விழாவையும்  சிறப்பாக நடத்த அறிவுரைச் சொல்லி  வருகிறார். அய்யா அவர்கள் தற்போது 02.08.2013 முதல் வெளிநாட்டுப் பயணத்தை  நாற்பதுபேர் கொண்ட குழுவுடன் தொடங்க  இருக்கிறார்.அய்யாவின் வருகையை  எதிர்பார்த

வாலி நீ கடலாழி....

Image
                  ( நன்றி)   வாலி நீ..... கடலாழி பாட்டில்... பண்பில் வறுமை சொல்லா கவிஆழி பண்ணும் பாட்டும் படைப்பாய்நீ பகுத்தறிவும் சொன்ன பெரியார்நீ இளமை துடிப்பில் என்றுமேநீ ஈடில்லா கவிமழை தந்தாய்நீ ஆண்டவன் கட்டளை அறிந்தவன்நீ அன்னைத் தந்தையை மதித்தவன்நீ கவிதைப் படைப்பில் வல்லவன்நீ தமிழுக்குஅணிகலன் சேர்த்தாய்நீ எப்போதும் ...... எல்லோர் மனதிலும் தமிழாய் வாழும் கவிஞன்நீ

வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....

அயல்நாட்டு முதலீடும் ஆலைகள் பல முடுவதும் நாறிக் கிடக்குது விதியென்று நான் சொல்ல நா கூசுது......   பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார் பொறுமையும் வேண்டு மென்கிறார் வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார் வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார் எத்தனையோ தொழில்கள் முடங்கியதை ஏதுமே அறியாதவராய் இருக்கிறார் ஏற்றத் தாழ்வும் இருந்தாலும்  ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார் பண்ணாட்டு வணிகத்தால் பணமும் பலருக்குமே  வேலை இழப்பும் உள்நாட்டு மக்களின் தவிப்பும் உள்ளபடி நல்லதாய் படிக்கிறார் அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார் அனைவருக்கும் உள்ளதாக  சொல்கிறார் வரிகளையே உயர்த்திக் கூட்டி வருடந் தோறும் சேர்க்கிறார் வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய் வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார் வாழ்வதற்கு  மட்டும் கஷ்டமான வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்

ஆழ் மனது ....

ஆழ்ந்த மனதுக் குள்ளே அன்புடன்  கோபமும்  இருக்கும் ஆனாலும் அப்பப்போ வெடிக்கும் அதனால் மனது வலிக்கும் தாழ்ந்த நிலையினால் அது தன்னையே தரம் தாழ்த்திவிடும் தானாகப் பேசவும் ஏசவும் தனிமையை நாடிக் கொல்லும் வீணான கற்பனையை வளர்க்கும் விவேகமற்ற வேதனையைத் தரும் வீண்பேச்சு ஏளனத்தை மதிக்கும் விடிவில்லா சந்தேகம் வகுக்கும் ஆண் பெண்களைச்  சேர்க்கும் ஆபத்தில் கொண்டுவிடும் ஊன் உறக்கம் தவிர்க்கும் உடன்பாடு இல்லாதுப்  பிரிக்கும் தான் கெட்டு தவித்தும் தனைச்சார்ந்தோரையும் கெடுக்கும் வீணான மனபிழற்ச்சி தரும் வேதனையும் இழப்பும் மிகும் ஏனிந்த மனநிலை இறைவா எப்படி தவிக்கிறார்  புரியுமா தவிர்க்க வழிதான் தெரியுமா தவிப்போரைக் காப்பாற்ற முடியுமா

தட்டச்சும் கணினி அனுபவமும்

                    எனது மலரும் நினைவுகளை மீண்டும் மீண்டும் வரும் சுவையான தருணங்களை   சொல்ல வேண்டும்  என்று திருமதி.சசிகலா அவர்கள் கேட்டுக் கொண்டதால் அவரின் விருப்பத்தின் பேரிலேயே  மீண்டு வருது.                       நான் வளர்ந்தது படித்தது  எல்லாமே சேலம்.வசித்தது அழகாபுரம்  ஐந்து ரோடு பகுதியில்.எல்லோரரையும் போல கல்லூரியில் சேர்ந்தவுடன் என்னையும்  தட்டச்சு பயில வேண்டி என்னையும் 1980 ஆகஸ்ட் மாதத்தில்அனுப்பினார்கள்.                   எல்லோருக்குமே அந்த வயதில் மாணவ மாணவியராய் சேர்ந்து படிக்க அதாங்க தட்டச்சு பயில அருகருகே அமர்ந்து  பேச  மிரட்சியும் விருப்பமும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா ?.நானும் நாள்தோறும் மாலைநேரம் தவறாமல் வேறு எங்கும் ஊர்சுற்றப் போகமால் செல்லுவேன்.                     அப்போதுதான் கணினிப் பற்றி எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது காரணம் நான் வரலாறு படைப்பிரிவை சேலம் அரசு கலைகல்லூரியில் படிப்பதால் எனக்கு தெரிந்திருக்கவில்லை.தட்டச்சு பயில வரும் மாணவ மாணவியர் சேர்ந்து கொண்டு அதைப்பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்  எனக்கு ப

அடிக்கடி மழைத்துளி

அடிக்கடி மழைத்துளி அணைத்திட துடிக்குது கடிக்கிற எறும்புமே கடையிலே கடிக்குதே ... இடுப்பிடை மடிப்பிலே அணைக்கிற போதிலே இருதயம் படபடவென அடிக்கடித் அடிக்குதே சிலுசிலு மூச்சிலே சேலையும் நழுவுதே சேர்கிற நேரத்தை சீக்கிரம் கேட்குதே விரலிடை மேனியில் மேகலை தேடுதே படர்ந்திட ஆசையில் படருதே தழுவுதே தொடத்தொட வெட்கமே துவழுதே தூண்டுதே சடசட மழையிலே சாந்தியும் அடையுதே

இடையில் வந்த சாதியாலே

உயர்ந்த தாழ்ந்த சாதியென்றே உண்ணும் உணவில் இல்லையே உலகில் பேசும் மொழியிலேயும் உயர்ந்து தாழ்வு மில்லையே உழைக்கும் இனம் மட்டுமே உயர்வுத் தாழ்வு பார்க்கிறார்கள் பிழைக்க வழித் தெரிந்திருதும் பேதம் கொண்டு வாழ்கிறார்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள் ஓலமிட்டே தினம்  அழுகிறார்கள் உழைப்பதற்கே தினம் பயந்து ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள் மறக்க வேண்டா மென்று மக்களையும் சேர்கிறார்கள் மனிதனையும் மிருகமாக்கி மக்களாட்சி கேட்கிறார்கள் இழிந்த நிலையில் வாழ்கையில் இதையும் ஏன்  வளர்க்கிறார்கள் இடையில் வந்த சாதியாலே இனம் பிரிந்து நிற்ககிறார்கள் துயரம் மிகும் வாழ்க்கையில் துணைக்குச் சாதி வேண்டுமா தூய்மையான அன்பும் நட்புடனே தூய வாழ்க்கை வேண்டுமா

பதிவர் கூட்டம் 01.09.2013

Image
பதிவுலகில் கூட்ட மொன்று பழகி சேர்ந்து வளருது பண்புடனே அனைவருமே பாசம் கொண்டு தொடருது  கலை இலக்கியம் நாடகமும் கல்விப் பற்றி விழிப்புணர்வும் உலகமெல்லாம் நடக்கின்ற உயர்ந்த பல விஷயங்களுடன் வலையுலகில் அனைவருமே வாழ்த்துப் பாடி மகிழுது வேறுநாட்டு மக்களுடன் வலையில் சேர விரும்புது வரும் 01.09.2013 அன்று சென்னையிலே இணைய வேண்டி வருக வருக வென்றே வலை யுலகை அழைக்குது அனைவருமே வந்திடவே அழைப்புச் சொல்லி வருவதால் ஆர்வமுடன் கலந்து கொள்ள ஆசை எனக்கும் தூண்டுது வலையுலகில் பவனி வரும் வயதோரும் முதியோரும் வருங்காலச் சரித்திரமாய் வந்திணைந்து சேர்ந்திடுங்கள்

குண்டுக் குழந்தைகள்

Image
             (நன்றி கூகிள்) தாய்பால் மட்டும் போதுமே தவிர எதுவும் வேண்டாமே நோய்கள் அதனால் தீண்டாதே நன்றே வளர்ந்திட உதவுமே அன்னை மனமும் அறிந்திடும் அன்பாய் பண்பாய் வளர்ந்திடும் காண்போர் மனதும் தீண்டிடும் கன்னத்தை கிள்ளிடத் தூண்டிடும் செயற்கை உணவைக் கொடுக்காதீர் சீக்கிரம் வளர்வதைப் பார்க்காதீர் இயற்கையை மாற்றிப் போகாதீர் இன்னல்கள் தேடி ஓடாதீர் அதிக உட்டம் கொடுப்பதனால் அளவில் பெரிதாய் குழந்தைகளும் எளிதில் உருவம் பெரிதாகி எல்லா உறுப்பும் பெருத்திடுமே பார்க்க நமக்கே அழகாகும் பார்த்ததும் தூக்கிட முடியாது படிக்கும் போதே அதனாலே பசங்கள் கேலியும் செய்வாரே இயற்கை உணவை கொடுங்கள் இதமாய் பதமாய் வளருங்கள் எல்லோர் போல மெலிதாக்க ஏற்றப் பயிற்சியை  நாடுங்கள்

ரசித்தவர்கள்