தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவமறியா பாலகன்.பாலச்சந்திரன்

 பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் 
உண்மையானது- சேனல் 4


பருவமறியா பாலகனை கொன்ற
இருள் மனது கொலைகாரன்
மடிவானா மக்களை இழப்பானா-வீட்டில்
இடிவிழுந்து இலங்கையில் இறப்பானா

குடிகெட்டு மதியிழந்து திரிவானா
குடும்பமே பைத்தியமாய் அலைவாரோ
இடுகாட்டில் தலை புதைத்து-தவறால்
சுடும் தீயில் விழுந்து மடிவானா

பிணம் தின்னும் குணம் மாறி 
மனம் திருந்தி வருந்து வானா
மக்களை பார்த்து மண்டியிட்டுக்-கதறி
மற்ற நாளையும் சிறையில் கழிப்பானா

ஈர நெஞ்சமுள்லோர்அவன்
கோர முகத்தை கிழித்து
 தீரத்தீர அடித்து துரத்தி-கோழையின்
குடும்பமே அழியாதோ மடியாதோ





Comments

  1. கொடுமைக்கார ராஜபக்சேவும் அவன் தம்பியும் தமிழன் கையால் சாகனும். அது ஒன்று போதும். நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கொலைகார பாவியை கொட்டடியில் போடணும்

      Delete
  2. அரக்கனுக்கு விரைவில் தண்டனை உண்டு...

    ReplyDelete
    Replies
    1. அகிலமே காறித்துப்பும் அழிவான்

      Delete
  3. அருமைச் சகோதரரே....
    வலிக்கின்றது உம் கவி! உரைத்தீர் உண்மைதனை...

    பதறப்பதறப் பறித்த எம்தமிழின உயிரினை
    சிதறவைத்த சிங்கக்கூட்டமிதன் குலத்தினை
    கதறவைக்கும் காலம் வரும் எமக்கு அதுவரை
    உதறாமல் காத்திடுவோமெம் உணர்வுதனை...

    ReplyDelete
    Replies
    1. வரும் அவனுக்கு தண்டனையும் தரும் காலம் மிக அருகில்

      Delete
  4. கொடுமை கண்டு வெகுண்டோம்! கண்ணீர் வரவழைத்தன கவிதை வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. இன்று கண்ணீர் நாளை நிச்சயம் அவனுக்கு செந்நீர் வரும்

      Delete
  5. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன் சரியாக விமர்சித்து வருகிறீர்கள்.எனக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்தமைக்கு தமிழுக்கு கடமைபட்டுள்ளேன்,நன்றி

      Delete
  6. அறம் பாடி அழியுங்கள் கவிஞரே!

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் அழிவானா அல்லது பணத்தால் அதையும் வெல்வனா?

      Delete
  7. அங்கே ஒருவன் வெளிப்படையாய் கொலை செய்கிறான்
    இங்கே மறைமுகமாக பல கொலைகள் உலக அழிவு இதுதான்

    ReplyDelete
    Replies
    1. உலகம் அழியவில்லை மனித உணர்வுகள் மட்டுமே அழிகிறது

      Delete
  8. அவனை மட்டும் அடித்து என்ன பயன் ,,,
    அவனுக்கு உடந்தையாக இருந்த நம்ம ஆட்களை என்ன செய்வது

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more