தெய்வங்கள்

தெய்வங்கள்

எங்கே நிம்மதி !


ஏழெட்டு வீடிறுக்கு
ஏசி  காரும்
நிறைந்திருக்கு

கூவிட்ட குரலுக்கு
கூட்டமாக நிறைய
 வேலையாளிருக்கு

வங்கியிலே பணமிருக்கு
வாங்கி வைத்த
நிலமிருக்கு பொருளிருக்கு

நடைபோக தெம்பிருக்கு
நலம்கேட்க
நட்பிங்கே மட்டுமிருக்கு

இத்தனை  இருந்தும்
இறைவனை நினைத்தும்
தப்பிருக்கே

ஆம்

பெற்றவரை விட்டுவிட்டு
பொறுப்பை மறந்தேனே
தவறு செய்தேனே

நிறைந்த சொந்தமெங்கே
நண்பர்களேங்கே
தமிழே நீயும் எங்கே

இத்தனையும் மறந்து
இங்கே தனியாய் வாழ்வதா
இனிய சொந்தம் மறப்பதா

உண்பதும் உணவா
உறவிழந்து மகிழ்வா
எங்கே நிம்மதி

பணம் பொருள்
போதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்

சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்

Comments

  1. பணம் பொருள்
    போதுமெனக்கு
    நேசமும் நிம்மதியும் வேண்டும்//

    அருமையான கவிதை.
    சொந்த, பந்தங்களை பார்க்க அவர்களுடன் நேசமாய் இருக்க நிம்மதி தானாய் வரும் தான்.

    ReplyDelete
  2. சொந்த நாட்டுக்கு வந்தாலே நிம்மதியும் மென்மையும் கிடைக்கும்.நன்றிங்க

    ReplyDelete
  3. //சொந்த நாடே சுகமென்று
    வந்தவழி செல்கிறேன்
    வாழுமிடம் செல்கின்றேன்//

    வரிகள் மூன்று ஆனாலும்
    வழி எது என்பதை
    வலி உடன் உணர்த்துகிறது.

    கவிதைகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு பணமிருந்தும் என்ன பயன் சொந்தமும் நட்பும் போல சந்தோசமான வாழ்க்கை கிடைக்குமா?

      Delete
  4. தேடியும் வாராது, வந்தாலும் நிலைக்காது! நண்ப!

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா நட்பும் சொந்தமும் எங்கே கிடைக்கும் இந்த ஊரில் தானே?

      Delete
  5. # சொந்த நாடே சுகமென்று
    வந்தவழி செல்கிறேன்
    வாழுமிடம் செல்கின்றேன்##
    சென்றவர்கள் அனைவருமே திரும்பி வரும் ஆசையில் தான் ஆனால் இங்கிருக்கும் கடமைகளும், இன்னமும் சேர்த்துக் கொண்ட எதிர்பார்ப்புகளும் அவர்களை தடுக்கிறது பாவம் சூழ்நிலைக் கைதிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஓரளவு பணம் இருந்தா போதும் சொந்தமும் நண்டபர்களுக்கினையாகுமா

      Delete
  6. வாழ்க்கை இது தானே !

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையை வாழவேண்டுமென சொல்கிறேன்

      Delete
  7. பணம் பொருள்
    போதுமெனக்கு
    நேசமும் நிம்மதியும் வேண்டும்

    சொந்த நாடே சுகமென்று
    வந்தவழி செல்கிறேன்
    வாழுமிடம் செல்கின்றேன்
    போதுமென்ற மனமே மிகப்பெரியது.

    ReplyDelete
    Replies
    1. போதேம்நேட்ற மனம் வேண்டும் பிரிந்த சொந்தம் சேர வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

      Delete
  8. //உண்பதும் உணவா
    உறவிழந்து மகிழ்வா...

    சொந்த நாடே சுகமென்று
    வந்தவழி செல்கிறேன்//

    புலம்பெயர்ந்த அத்தனை மனத்திலும் இருக்கின்ற வலியை அருமையாகக் கூறினீர்கள்!

    அருமை! பாராட்டுக்கள்!
    ”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா”...

    ReplyDelete
    Replies
    1. உண்மை.பணத்திற்காக வெளியில் சென்றவர்கள் திரும்பி வரணும் நிம்மதி பெறனும்

      Delete
  9. சொந்த நாடே சுகம் என்று திரும்புகின்றேன்! உண்மையான வரிகள்! எத்தனைதான் பணம் வெளிநாட்டில் சேர்த்தாலும் சொந்தநாடு போலாகுமா?! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வரணும் பணத்தை தாண்டி சொந்தங்களைத்தேடி வரணும்

      Delete
  10. சொர்க்கமேயானாலும் அது நம்மூரு போலாகுமா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை அதனால்தான் இங்கேயே வரச்சொல்கிறேன்

      Delete
  11. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. :-)

    ReplyDelete
  12. வழக்கம்போலவே வருத்தெடுக்கிரீன்களே

    ReplyDelete
  13. பணம் வரும் வரை அதைத் தேடுவோம், வந்த பின் நிம்மதி தேடுவோம்,--ஆனாலும் பணத்தை விட மாட்டோம்,இல்லாதவருக்கு கொடுக்க மாட்டோம்,
    நிம்மதி....எதில் கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பணம் அதிகமானால் நிம்மதிதான் கெடும்

      Delete
  14. கவிதைக்கு மட்டும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்ததுக்கும் நன்றிங்கம்மா.

      Delete
  15. உங்களுடைய கவிதை நிஜத்தை அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உண்மையில் எல்லோரும் யோசிச்சா பணம் என்பது வெறும் காகிதம் தான்

      Delete
  16. நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.

    பாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.


    இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.

    Regards,
    gopalelango.blogspot.com

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more