தெய்வங்கள்

தெய்வங்கள்

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும்
பார்த்தே ஓடி மறைந்திடுமாம்
பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப்
பயந்தே நம்மைக் கடித்திடுமாம்

வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டிடுமாம்
விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு
வீணாய் நம்மைத் துரத்திடுமாம்

வேண்டா வெறுப்பாய் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்

ஈன்ற  பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும்

சோதனை  துயரம் ஏழ்மையுமே
சாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்


......கவியாழி........







Comments

  1. வணக்கம்
    ஐயா

    கவிதை அருமை .வாழ்த்துக்கள்.....ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies

    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  2. எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
    எதிராய் காரியம் கெட்டிடுமாம்
    எதிலும் பொறுமைக் காத்தாலே-அதனால்
    எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்//

    எளிமையாகச் சொல்லப்பட்ட
    அருமையான கருத்து
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனதில் நிறுத்தி வைத்தால் நாமும் மனிதனாய் வாழ்ந்திடலாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  3. வேண்டா வெறுப்பாய் பழகினாலே
    வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
    விஷயம் இன்றி வாதிட்டாலே-முடிவில்
    வீணே சண்டை வந்திடுமாம்

    அருமையான அனுபவ மொழிகள்..!

    ReplyDelete
    Replies

    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  4. // சோதனைத் துயரம் ஏழ்மையுமே
    சாதனை செய்ய வழி தருமாம்.. //

    அருமையான உண்மையான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  5. சோதனைத் துயரம் ஏழ்மையுமே
    சாதனை செய்ய வழிதருமாம்
    சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
    செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்

    நன்று நன்று ...!உண்மை தான் அருமையான வரிகள்
    தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  6. வேண்டா வெறுப்பாய் பழகினாலே
    வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
    விஷயம் இன்றி வாதிட்டாலே-முடிவில்
    வீணே சண்டை வந்திடுமாம்

    உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  7. அருமை! அருமை! எப்படி இப்படி அருமையான கருத்துகளுடன் ஒரு கவிதை எழுதுகிறீர்கள் !!!!
    வேண்டா வெறுப்பாய் பழகினாலே
    வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
    விஷயம் இன்றி வாதிட்டாலே-முடிவில்
    வீணே சண்டை வந்திடுமாம்

    ஈன்றப் பொருளைக் காத்தாலே
    இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
    இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
    இருப்பதைக் கொடுப்பதும் நலமாம்

    எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
    எதிராய் காரியம் கெட்டிடுமாம்
    எதிலும் பொறுமைக் காத்தாலே-அதனால்
    எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்

    வாழ்த்துக்கள்! தொடர்கிறோம் உங்களை!! எங்கள் வலைப்பூவில் ஒரு பூவாக சேர்ந்ததற்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
    Replies

    1. என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிங்க அய்யா.தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  8. த.ம. போட்டாயிற்று!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  9. பொறுமை பற்றிய அழகான பாட்டு...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  10. இதைப் படிக்கையிலே
    ஆனந்தத் தேன்மழை
    மனதெங்கும் கொட்டிடுதே
    நன்றி ரொம்ப நாளைக்குப் பிறகு எளிமையும், இனிமையும், ஆழமுடைமையும் உள்ள கவிதை வாசிக்க தந்ததற்கு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  11. 'பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே' என்ற ஒரு பழைய பாடல் உண்டு. பொறுமைக்கு ஈடு இணை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  12. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  13. சகோதரருக்கு வணக்கம்
    பொறுமையும் வஞ்சகமும் வன்முறையையும் களைந்தாலே இந்த உலகம் நன்மை பொருந்தியாக உருவெடுக்கும். அன்பு செய்யின் பகைவரும் நண்பர்களாக மாறுவார்கள். மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  14. அன்பின் கவியாழி கண்ணதாசன் - எளிதில் உண்ர்ச்சியில் தவறிழைத்தால் - கவிதை அருமை -

    //வேண்டா வெறுப்பாய்ப் பழகினால்
    வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
    விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
    வீணே சண்டை வந்திடுமாம் // - அருமையான சிந்தனை

    புலவர் இராமானுசமும் பாராட்டி இருக்கிறார்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்து வழங்கியமைக்கும் நன்றி.

      Delete
  15. [[[எதிலும் பொறுமை காத்தாலே-அதனால்
    எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்]]

    பொறுமை அவசியம்; பொறாமை அனாவசியம்!
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  16. ஆஹா....ஒருமாதம் கடந்தாலும் வந்திருந்தமைக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more